இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மறைவு குறித்து தெரிந்தவுடன் நடிகர் ரஜினிகாந்த் அவரது வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், “இயக்குநர் சிகரம் கே.பி. ஸாரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. கே.பி.யை இழந்ததால் என்னையே நான் இழந்ததாக வருந்துகிறேன். கே.பி. ஸார் என்னை ஒரு நடிகராக பார்த்ததைவிட மகனாகவே பார்த்தார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்..” என்றார்.
Our Score