உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் திரைப்படம் ‘அராத்து’.
‘ப்ரியமுடன்’, ‘யூத்’, மற்றும் ‘ஜித்தன்’ ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, இப்போது தனது பெயரை ‘ப்ரியமுடன்’ ஷெல்வா என மாற்றியுள்ளார். இவர் இயக்கியிருக்கும் நான்காவது படம் இது.
மூன்று வெற்றிப் படங்களை தந்துள்ள ஷெல்வா தற்போது இந்த ‘அராத்து’ திரைப்படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் ‘பிரியமுடன்’ ஷெல்வா, “உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வட சென்னையை களமாகக் கொண்டது இப்படம். கதையின் யதார்த்தம் குறையாமல் எடுக்க திட்டமிட்டுள்ளோம். அழகிய காதலையும், முரட்டுத்தனத்தையும் முறையே சரிசமமாக கொண்டதுதான் இந்த ‘அராத்து’ திரைப்படம்.
படத்திற்கு புத்துணர்வு தரும் வகையில் விஜய் கார்த்திக், சம்பி ஆகிய புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளோம். ‘டங்கா மாரி’ புகழ் விஜி இரண்டு பாடல்களை எழுதி அவரே பாடியிருக்கிறார். வட சென்னையை பகுதியை மிகுந்த பொருட்செலவில் செட் போட்டு அதில் படமாக்கியுள்ளோம். இது கதைக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்புகிறோம்…” என்றார்.