மிதுன் ஆதித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘பாலமுருகனின் குதூகலம்’.
இந்தப் படத்தில் புதுமுகம் பாலமுருகன் கதாநாயகனாக நடிக்கிறார். அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார். மேலும், ‘குக் வித் கோமாளி’ புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, TSR, அனிஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
தயாரிப்பு – மிதுன் ஆதித் புரொடக்ஷன்ஸ், இயக்கம் – உலகநாதன் சந்திரசேகரன், ஒளிப்பதிவு – மணி பெருமாள், இசை – பிஜார்ன் சுர்ராவ், படத் தொகுப்பு – மப்பு பிரகாஷ், கலை இயக்கம்– L.கோபி MFA, சண்டைப் பயிற்சி இயக்கம் – Danger மணி, நடனம் – அப்சர், நிர்வாக தயாரிப்பு – அம்பிகாபதி.M.
முழுக்க, முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குநரான துரை செந்தில்குமார் அவர்களிடம் துணை – இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரான மு.பெ.சுவாமிநாதன் இப்படத்தின் படப்பிடிப்பினை இன்று காலை திருப்பூரில் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.