full screen background image

சசிகுமார் – லிஜோமோல்ஜோஸ் நடிக்கும் புதிய திரைப்படம்..!

சசிகுமார் – லிஜோமோல்ஜோஸ் நடிக்கும் புதிய திரைப்படம்..!

தமிழில் பல பிரம்மாண்டமான படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராம், முதல் முறையாக தனது விஜயகணபதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக ஒரு படத்தினைத் தயாரித்து வருகிறார்.

இயக்குநரும், நடிகருமான சசிகுமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். ஜெய் பீம்’ படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இவர்களுடன் பருத்தி வீரன்’ சரவணன், கே.ஜி.எஃப்.மாளவிகா, போஸ் வெங்கட், மு.ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை ‘கழுகு’ படத்தை இயக்கிய இயக்குநரான சத்ய சிவா இயக்கி வருகிறார்.

1990-களில் உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பான திரில்லர் டிரமாவாக இப்படம் உருவாகிறது.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

1990-ம் ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால், அந்தக் காலக்கட்டத்தைத் திரையில் கச்சிதமாகக் கொண்டு வரப் படக் குழு கடுமையாக உழைத்து வருகிறது.

1990-களின் காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப் பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்துப் படத்தின் காட்சிகளைப் படக் குழு படமாக்கி வருகிறது.

இப்படத்தின் தலைப்பு, டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Our Score