full screen background image

இளைஞர்களின் நட்பு, கனவுகள் பற்றிப் பேசும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படம்..!

இளைஞர்களின் நட்பு, கனவுகள் பற்றிப் பேசும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படம்..!
பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார், பூர்வா புரொடக்ஷன்ஸ் என்ற தனது சொந்த பேனரில் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. 
 
இந்தப் படத்தில் செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம்.அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாத் ராமர் இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.  இசையமைத்து, தயாரித்து, பாடல்களையும் பிரதீப் குமார் எழுதியுள்ளார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார், ராதாகிருஷ்ணன் தனபால்(எடிட்டர்), விஜய் ஆதிநாதன்(கலை), அமர்நாத்(டிஐ கலரிஸ்ட்), சதீஷ் சேகர்(டைட்டில் சிஜி), isquare மீடியா (ஓப்பனிங் கிரெடிட்ஸ் அனிமேஷன்), யாதவ் ஜேபி(டைட்டில் & போஸ்டர் டிசைன்ஸ்), ஜி.சுரேன் (ஒலிக்கலவை) மற்றும் ஜி.சுரேன் & அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு).

 
இந்தப் படம் 2018-ம் ஆண்டு நடக்கிறது. ஒரு சிறிய நகரத்தில் வாழும் இளைஞர்களை சுற்றி நகரும் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. சாலையை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதைக் களம் நகர்கிறது.
 
மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள் இரண்டு இளைஞர்கள். பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். வேகமாக மாறிவரும் சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் படும் அவலத்தையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் இத்திரைப்படம் படம் பிடித்துக் காட்டுகிறது.

இதன் படப்பிடிப்பு மதுரை மற்றும் மாயவரம் ஆகிய இடங்களில் 42 நாட்கள் நடந்துள்ளது.

 
படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்து, வரும் 2024 மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
 
Our Score