வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றி, தரமான படங்களை தந்து பாரட்டுக்களை குவித்த இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் ‘இரவு’. இப்படத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்கிறார்.
மேலும், மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் – M10 Productions, தயாரிப்பாளர் – M.S.முருகராஜ், இயக்கம் – ஜெகதீசன் சுபு, ஒளிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் தயாநிதி, இசை – அரோல் கரோலி, படத் தொகுப்பு – C.S.பிரேம் குமார், கலை இயக்கம் – K.மதன் குமார், வசனம் – பாபு தமிழ், பாடல்கள் – ஞானகரவேல், கார்த்திக் நேதா, கருணாகரன், சண்டை பயிற்சி இயக்கம் – ஃபயர் கார்த்திக், நடனப் பயிற்சி இயக்கம் – பாபா பாஸ்கர், பத்திரிகை தொடர்பு – சதீஷ் (AIM).
வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க் கதைகள் வந்திருந்தாலும், இப்படம் உணர்வுகளை மையமாக கொண்டு, பரபரப்பான திரைக்கதையில், ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.
ஓர் இரவில் நடக்கும் இக்கதை, முழுக்க சென்னை ஈ.சி.ஆர். பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.