தெருவோர ‘டீ’ கடைகள் நம் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பதில் ஒரு சிறப்பிடத்தை பிடித்துள்ளது. சென்னை கோட்டைமுதல் டெல்லி செங்கோட்டைவரை ‘டீ’ கடைகள்தான் தலைப்பு செய்திகளாய் திகழ்ந்து வருகிறது. இந்த மக்களின் பாராளுமன்றமான ‘டீ’ கடையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம்தான் இந்த ‘அஞ்சல’ திரைப்படம்.
இயக்குநர்கள் ரத்னகுமார், மூர்த்தி மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த தங்கம் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.
ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் புரோடக்சன் சார்பில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயன் இப்படத்தை தயாரிக்கிறார். இவர் பிரபல சண்டை பயிற்சியாளரான சூப்பர் சுப்பராயனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Yamaha ஷோ ரூம் வைக்கும் லட்சியத்துடன் உழைக்கும் மெக்கானிக்காக விமல், கல்லூரி மாணவியாக நந்திதா நடிக்கிறார்கள். பசுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்றும் இமான் அண்ணாச்சி, ஆடுகளம்’ முருகதாஸ், சுப்பு பஞ்சு இவர்களுடன் ‘டீ’ கடையும் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது.
சூப்பர் சுப்புராயன் சண்டை பயிற்சியினை மேற்கொள்ள ஒளிப்பதிவாளர்கள் KV குகன் மற்றும் சௌந்தர்ராஜன் அவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவின்.K.L படத் தொகுப்பை கையாள, M.G.முருகன் கலை இயக்கத்தை கவனிக்கிறார். மலையாளத்தின் வெற்றி படங்களான ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படங்களுக்கு இசையமைத்த கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படம் பற்றி கூறிய இயக்குநர் தங்கம் சரவணன், “ஒரு நாள் தற்செயலாக ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனிடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே இப்படத்தை தானே தயாரிக்க முன் வந்தார்.
நம் வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கவிருக்கும் அன்றாட நிகழ்வுகளின் கோர்வையே அஞ்சல’. அனைவரயும் கவரும் ஒரு நகைச்சுவை கலந்த காதலுடன், சிறந்த பொழுது போக்கு பாடமாக வரப் போகிறது இந்த ‘அஞ்சல’. இத்திரைப்படத்தின் இசை அனைவரையும் கவரும்.
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இப்போது போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்..” என்றார்.