full screen background image

வெளிநாட்டு மோகத்திற்கு குட்டு வைக்கும் படம் ‘ஆகம்’..!

வெளிநாட்டு மோகத்திற்கு குட்டு வைக்கும் படம் ‘ஆகம்’..!

தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகளில் தமிழில் சரளமாக பேசி நடிக்கும் நடிகைகள் மிக குறைவு. பலவேறு விளம்பர படங்களில் நடித்து ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமான தீக்சிதா, தமிழில் சரளமாக பேசி, சென்னையிலே வசிக்கும் தமிழ் பெண் ஆவார்.

‘ஆகம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் தீக்சிதா, தன்னைப் பற்றியும், ‘ஆகம்’ படம் பற்றியும் அளித்த பேட்டி இது :

“நமது நாட்டில் பிறந்து நமது அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்து, பிறகு வெளிநாட்டில் வேலை தேடி சென்று தன்னுடைய அறிவை வெளிநாட்டுக்கு விற்பவர்களை பற்றிய கதைதான் இந்தப் படம்.

அடிப்படையில் நான்கூட ஒரு கம்ப்யூட்டர் பொறியியல்  பயின்றவள்தான். என் சக மாணவர்களைப் போலவே எனக்கும் வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசைதான். அதற்கு எனது பெற்றோர்கள் தடையாக இருந்தனர். இதற்காக நான் முதலில் சிறிது வருத்தப்பட்டாலும் இன்று ‘ஆகம்’ படத்தில் நடித்த பிறகு எனது பெற்றோரின் முடிவு சரியானதுதான் என்று எண்ணுகிறேன். ‘ஆகம்’ படம் வெளிவந்த பின்னர் எனக்குள் ஏற்பட்ட இந்த மாற்றம், படம் பார்க்கும் எல்லோருக்கும் நிச்சயம் தோன்றும். 

இந்த ‘ஆகம்’ படத்தில் நான் மிகவும் இயல்பான ஒரு வேடத்தில் நடித்து இருக்கிறேன். இந்தப் படத்தில் அனுபவமிக்க சில நடிகர்களுடன் நடித்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.  நடிகர் ஜெயப்பிரகாஷ் ஸார் ஒரு நடமாடும் அறிவுக் களஞ்சியம். ரியாஸ்கான் ஸார், இன்றும் எல்லோரையும் பிரமிக்கவைக்கும் வகையில் என்றும் இளமையாக fit ஆக இருக்கிறார். Fitness பற்றி அவர் பேசினால் இன்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஹீரோ  இர்பான் எனக்கு பல நாட்களாகவே பழக்கம். அவருடைய நடன திறமைக்கும், நகைச்சுவை உணர்ச்சிக்கும் இன்னமும் உயரத்துக்கு அவர் செல்வார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப் படம் என்னையும் கோடம்பாக்கத்தில் ஒரு ஹீரோயினாக அங்கீகரிக்க வைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..” என்றார்.

Our Score