full screen background image

பா.விஜய் இயக்கி, நடிக்கும் வித்தியாசமான ஆக்சன் திரில்லர் படம் ‘ஆருத்ரா’

பா.விஜய் இயக்கி, நடிக்கும் வித்தியாசமான ஆக்சன் திரில்லர் படம் ‘ஆருத்ரா’

வில் மேக்கர்ஸ்  என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து,  தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடவிருக்கும் திரைப்படம் ‘ஆருத்ரா’.

இதில் வித்தகக் கவிஞரான, நடிகர் பா. விஜய் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். மும்பையை சேர்ந்த மாடலிங் மங்கை தக்ஷிதா, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி  ஆகிய மூன்று பேர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் இயக்குநர்-நடிகர் கே பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், நடிகர் விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, அபிசேக், கண்ணன்,  பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், இயக்குநர் ஏஸ்.ஏ.சந்திரசேகர், மீரா கிருஷ்ணா, சஞ்சனா சிங், பேபி யுவா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பா.விஜய், ஒளிப்பதிவு – B.L.சஞ்சய், இசை – வித்யாசாகர், பாடல்கள் – பா விஜய், படத் தொகுப்பு – ஷான் லோகேஷ், கலை இயக்கம் – ராம் பிரசாத், சண்டை பயிற்சி – கணேஷ், நடனம் – அசோக்ராஜா, பாரதி, ஒப்பனை – ராஜா, உடைகள் – செல்வம், மக்கள் தொடர்பு – யுவராஜ்.

_MG_3195

படம் பற்றி இயக்குநரும், நடிகருமான பா.விஜய் பேசும்போது, “ஸ்ட்ரா பெர்ரி’ படத்தைத் தொடர்ந்து என்னுடைய இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் ‘ஆருத்ரா’.

இந்த ‘ஆருத்ரா’ திரைப்படம் ஒரு எமோஷனல் வித் க்ரைம் திரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தில் என்னுடைய தந்தையாக, வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்  நடித்திருக்கிறார்.

நான் ‘சிவமலை’ என்ற கேரக்டரில் தொன்மையான பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் ஊழியராக நடித்திருக்கிறேன்.

இயக்குநர் கே.பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும்  துப்பறியும் நிபுணர்களாக சுவாரசியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

சிறிது இடைவெளிக்கு பின் இந்த படத்தின் மூலம் நடிகர் விக்னேஷ் மீண்டும் தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்திருக்கிறார்.

pa.vijay

‘ஸ்ட்ராபெர்ரி ’யில் எப்படி ஒரு சமூக கருத்தை அழுத்தமாக பதிவு செய்தேனோ, அதேபோல் இந்த ‘ஆருத்ரா’விலும் சமூகக் கருத்து ஒன்றை அக்கறையுடன் மையப்படுத்தியிருக்கிறேன். 

இரண்டு, மூன்று சம்பவங்களை பார்த்து, கேட்டு, படித்த பின்புதான் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறேன்.

‘ஆருத்ரா’ என்பது ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர். இந்த படத்தில் மூன்று நாயகிகள் இருந்தாலும் காதல் காட்சிகள் என்று தனியாக எதுவும் இல்லை.

இந்த படத்தில் அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி இருக்கிறது. இந்தப் படத்தின் கதையை பெற்றோர்கள் உணர்ந்தால், அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்படியெல்லாம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதையும், எப்படியெல்லாம் பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதையும் தெரிந்து கொள்வார்கள்.

சென்னை, பாண்டிசேரி, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், ஹரித்துவார், குலுமணாலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. மொத்தம் எண்பத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.

படத்தில் நாற்பது நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறவிருப்பதால், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அண்மையில் வெளியிட்டோம். இதற்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

படத்தின் டீஸரை கடந்த புத்தாண்டு தினத்தன்று துபாயில் வெளியிட்டோம். விரைவில் இசை மற்றும் டிரைலரை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். பொங்கலுக்கு பிறகு படம் வெளியாகவுள்ளது. இப்படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமான முறையில் வெளியிட இருக்கிறார்கள்..” என்றார்.

Our Score