BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு, ‘ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப் பெரும் பொருட்செலவில்,மிகப் பிரம்மாண்டமான படைப்பாகத் தயாரிக்கிறார்.
நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். மாஸ்டர்ஸ் அன்பறிவு மற்றும் பிரபு மாஸ்டர் இணைந்து சண்டைக் காட்சிகளை வடிவமைக்கவுள்ளனர். அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார். பப்ளிசிட்டி டிசைனிங் பணிகளை சசி & சசி செய்கிறார்கள். வெங்கட்ராம் பப்ளிசிட்டி போட்டோகிராஃபராக பணியாற்றுகிறார். பத்திரிக்கை தொடர்பு பணிகளை சதீஷ், சிவா(AIM) செய்கிறார்கள்.
இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக் குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சமீபத்தில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசும்போது, “இந்த நாளுக்காக நாங்கள் நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.
நான் ஒரு தமிழ் அமெரிக்கன். ஏன் அமெரிக்கர்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் இருக்கிறார்கள் என நான் வெகுவாக ஆராய்ச்சி செய்துள்ளேன். ஹாலிவுட்டில் எப்படி பெஸ்ட் படங்களைக் கொடுக்கிறார்கள். அதை எப்படி நாம் கோலிவுட்டில் கொடுக்கலாம் என முயற்சிப்பதே எங்கள் நோக்கம்.
எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொன்றையும் கவனமாக ஆராய்ந்து, ஆட்டோமெடிக்காக இயங்குமாறு செய்துள்ளோம். நான் 2 படம் அல்லது 3 படம் எடுப்பதற்காக வரவில்லை. ஒரு மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கவே வந்துள்ளேன். பல படங்களைத் தொடர்ந்து நாங்கள் எடுக்கவுள்ளோம்.
ஒரு துறையில் வளர்ந்தவனாக நான் இந்தச் சமூகத்திற்கு சிலவற்றைத் திரும்ப அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. நாங்கள் சம்பாதிப்பதை, திரும்ப மக்களுக்குத் தர வேண்டும். கொடுப்பது வாங்குவதைவிட மகிழ்ச்சிகரமானது. அதற்கான பல வழிகளில் ஒன்றுதான் இந்தக் கம்பெனி.
உலகளவில் பல முன்னணி கம்பெனிகளில் டேட்டா ரிஸ்க் இருக்கிறது. அந்த டேட்டாக்களைப் பாதுகாக்கும் பணிகளைத்தான் எங்கள் கம்பெனி செய்து வருகிறது. 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் சேவைகளை வழங்கி வருகிறோம்,
இப்படிப்பட்ட நிலையிலிருந்து கொண்டு, ஏன் திரைத்துறைக்குள் வருகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். ஏனெனினில் சினிமா எனக்கு அவ்வளவு பிடிக்கும். அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது. சாம் சி.எஸ். செய்வதை என்னால் செய்ய முடியாது. ஆனால், அவர்களை வைத்து அற்புதமான படைப்புகளை உருவாக்க முடியும். அந்த ஆசையில்தான் இந்தத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளோம்.
இந்தப் படத்திற்குப் பர்ஃபெக்டான ஹீரோ அருண் விஜய்தான். தான்யா ரவிச்சந்திரன் மிக அழகான படங்கள் செய்துள்ளார். சித்தி இத்னானி பல அற்புதமான படங்கள் செய்துள்ளார். இவர்கள் மூவரையும் இணைத்து அற்புதமான கதையை செய்துள்ளார் திருக்குமரன்.
அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைகள் தேர்ந்தெடுப்பதில், தயாரித்து வழங்குவதில் ரசிகர்களுக்கு நல்ல படைப்புகள் தர வேண்டும் என்பதில் வெகு கவனமாக இருக்கிறோம். அந்த வகையில் திருக்குமரன் மிகச் சிறந்த திரைக்கதையை அமைத்துள்ளார். சாமின் இசை படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மனோஜ் பினோ என் கஸின். அவர்தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார். அவர் இதற்கு முன் திரைத்துறையில் பல பணிகளில் பணியாற்றியுள்ளார்.
இன்று உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. என் படக் குழுவினர், நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி..” என்றார்.
BTG நிறுவன நிர்வாகத் தலைமை அதிகாரி மனோஜ் பினோ பேசும்போது, “பிடிஜி நிறுவனத்தின் பாபிக்கு முதல் நன்றி. சினிமாவில் வந்தது 8 வருஷம் ஆகிவிட்டது, அதில் பீக் இந்த வருடம்தான். பிடிஜி நிறுவனம் மிகப் பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தருகிறது.
பாபியும் நானும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். பாபியை எப்போதும் பிரமிப்பாகப் பார்க்கும் அளவு, பணிகள் செய்துகொண்டே இருப்பார். நான் ஒரு மருத்துவன் என்றாலும் எங்கள் குடும்பம் மொத்தமும், பாபியைப் பிரமிப்பாக பார்க்கிறோம்.
பாபி “படம் எடுக்கப் போகிறேன். பார்த்துக் கொள்” என்று என்னிடம் சொன்னபோது எந்த மறுப்பும் என்னிடம் இல்லை. பாபியின் ஷெட்யூலை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். அவர் அத்தனை வேலைகளை முடித்துவிட்டு, என்னுடன் இரவில் படம் பற்றிப் பேசுவார். என் மனைவியே என்னைவிட பாபியிடம்தான் அதிகம் பேசுகிறீர்கள் என்பார். ஆனால், நாங்கள் பேசினால்தான் அடுத்த ஸ்டெப் என்ன செய்யலாம் எனத் தீர்மானிக்க முடியும். எங்கள் உழைப்பும், பேச்சும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது உங்களுக்கும் தெரியும்.
இப்போது சினிமாவின் வியாபாரம் மாறியிருக்கிறது. யார் நடிக்கிறார்கள், என்ன படம், என்ன கதைப் படம் எப்படி வரும் என்பதை எப்போது கேட்டாலும், எங்களால் காட்ட முடியும். அது மாதிரிதான் நாங்கள் இயங்கி வருகிறோம். ஒரே நேரத்தில் 3 படங்கள். இப்போது அடுத்தடுத்தக் கதைகளையும் கேட்டு வருகிறோம்.
எங்களால் ஒரே நேரத்தில் பல படங்களைக் கையாள முடியும் என்பதை நிரூபிக்க நினைக்கிறோம். அடுத்தடுத்து திட்டமிட்டபடி பல படங்கள், எங்கள் நிறுவனம் மூலம் வரும்.
ஜெயம் ராஜா என் நீண்ட கால நண்பர். எனக்காக எங்களை வாழ்த்த வந்துள்ளார் நன்றி. அஜய் ஞானமுத்து எங்கள் நிறுவனத்தில் மிரட்டலான படத்தைச் செதுக்கி வருகிறார். டிமாண்டி காலனி-2 உங்களை மிரட்டும்.
அருண் விஜய் நான் சினிமாவுக்கு வரும் முன்பே நண்பர், அப்போதும் இப்போதும் அண்ணன் என அன்பாக இருப்பார். அவர் எங்கள் படத்தில் நடிப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இந்தக் கதை வந்தவுடன் அவரிடம்தான் முதன் முதலில் கதைச் சொல்லச் சொன்னேன். அவருக்குக் கதை பிடித்ததில் மகிழ்ச்சி.
இயக்குநர் திருக்குமரன் மிகச் சிறந்த திறமைசாலி. அவரிடம் பெரிய பிளானிங் இருக்கும். அது அவரது பிளஸ். இந்தப் படம் கண்டிப்பாகத் திருக்குமரனுக்கு சூப்பர் ஹிட்டாக அமையும். அவர் பெரிய வெற்றிப் பெற்றால் எங்களுக்கு மகிழச்சி. சித்தி இத்னானி பலரது மனதைக் கொள்ளை கொண்டவர். இந்தப் படம் முடியும்போது தமிழ்ப் புலவர் ஆகிவிடுவார். தான்யா இப்படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி.
சாம் சி.எஸ். பாடல்கள், பின்னணி இசை அற்புதமாக வந்துள்ளது. நடிகர் பாலாஜிக்கு இது பெரிய திருப்புமுனையாக இருக்கும். எடிட்டர் ஆண்டனி எப்போது கேட்டாலும் வெளிநாட்டில் இருக்கிறேன் என்பார், எங்களை வாழ்த்த வந்த ஆண்டனிக்கு நன்றி.
எல்லாப் படமும் பிரம்மாண்டமாக வரும் என்று சொன்னால் உங்களுக்குப் போரடிக்கும். ஆனால், அதுதான் உண்மை. இந்தப் படம் ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் உங்களுக்கு ஆச்சர்யத்தைத் தரும். டிவிஸ்ட் இருக்கும். உங்களைக் கண்டிப்பாக இப்படம் மகிழ்ச்சிப்படுத்தும்..” என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசும்போது, “சில படங்களின் டைட்டிலை கேட்கும்போது இவ்வளவு நாளா இந்த டைட்டில் வைக்கலையா எனத் தோணும். ரெட்ட தல அப்படி ஒரு டைட்டில். இதன் ஃபர்ஸ்ட் லுக் மிரட்டலாக இருக்கிறது.
தயாரிப்பாளர் பாபி சின்ன சின்ன விசயங்களுக்கும் எனக்குக் கால் செய்வார். தயாரிப்பாளர் மாதிரியே இருக்க மாட்டார். அவர் மிகப் பெரிய முதலாளி. அவரது மெசேஜ் கால் பார்த்தால் பாசிடிவிட்டியாக இருக்கும்.
ஒரு படம் ஹிட்டாகக் கதை 50 பர்செண்ட் இருந்தால் போதும், மீதி பாசிடிவிட்டி இருந்தாலே அந்தப் படம் பயங்கர ஹிட்டாகும். இந்தப் படத்தில் பணியாற்றும் அனைவரும் இந்தப் படம் ஜெயிக்க வேண்டும் என்பதில் பாசிட்டிவிட்டியுடன் இருக்கிறார்கள்.
சாம் சி.எஸ். என்றாலே பின்னணி இசையில் மிரட்டுவார் என்பார்கள். அதற்காக நான் பாடல்கள் நன்றாகச் செய்ய மாட்டேன் என அர்த்தம் இல்லை. நான் ஒவ்வொரு வருடமும் நல்ல பாடல்களைத்தான் தந்து வருகிறேன். இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாமே பெரிய ஹிட்டாகும். இயக்குநர் ஒவ்வொரு பாடலின் போதும் தரும் பாராட்டுக்கள் எனக்குப் பெரும் ஊக்கம் தரும்.
இந்தக் கம்பெனிக்கு யார் படம் செய்தாலும் ஹிட் படமாகத்தான் இருக்கும் இவர்களிடம் அத்தனை திட்டமிடல் இருக்கிறது. அருண் விஜய் சார் மிகப் பெரிய உழைப்பாளி. எத்தனை வருடமானாலும் இளமையாக அப்படியே இருக்கிறார். அவருடன் வேலை பார்த்ததில் மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும்.
நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசும்போது, “பாபி சாரை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். அவர் அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது அப்டேட் தந்து கொண்டே இருப்பார். அவரை நேரில் பார்த்தது மகிழ்ச்சி. என்னை இந்தப் படத்தில் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநர்த் திருக்குமரனுக்கு நன்றி. மனோஜ் சாருக்கும் நன்றி. அருண் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி..” என்றார்.
நடிகை சித்தி இத்னானி பேசும்போது, ”இந்தப் படத்தின் வைப் மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் படத்தில் நானும் இருப்பது மிக மிக சந்தோஷமாக உள்ளது. திருக்குமரன் சாருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து நல்ல இயக்குநர்கள் கிடைத்து வருகிறார்கள். கௌதம் மேனன் சாரில் ஆரம்பித்து அனைவரும் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் தந்து வருகிறார்கள். அருண் விஜய் சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப் படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி..” என்றார்.
இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் பேசும்போது, “இந்த இடத்தில் நான் நிற்கக் காரணமான அனைவருக்கும் நன்றி. ஃபர்ஸ்ட் லுக் தனித்துவமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன போது, ஒரு கான்செப்ட் வைத்து உருவாக்கலாம் என இந்த ஐடியாவை அருண் விஜய் சாரிடம் சொன்னேன். இது என்ன மாதிரி ஐடியா எனக் கேட்டார். “இரண்டு மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட நினைக்கிறது. அதுதான் கரு..” என்றேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது.
பாபி சார், மனோஜ் சார் இருவரும் இதைக் கேட்டுவிட்டு, “எவ்வளவு செல்வானாலும் பராவாயில்லை. இதைத்தான் எடுக்கணும்..” என்றார்கள். அருண் விஜய் உடம்பை வில்லாக வளைத்து, இதற்காக உழைத்துள்ளார்.
இந்த டைட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சாருடையது, அருண் விஜய் சாருக்கும் எனக்கும் இந்த டைட்டில் பிடித்திருந்தது. இந்தக்கதைக்கு இதுதான் சரியாக இருக்குமெனத் தோன்றியது. ஏ.ஆர்.முருகதாஸ் சாரிடம் கேட்டேன், அவர் “வைத்துக் கொள்” என அன்போடு தந்தார்.
இந்தப் படம் ஒரு குழுவாக உருவாக்கும் படம் பாபி சார், மனோஜ் சார் மட்டுமல்லாமல் பிடிஜி என்பது எங்களையெல்லாம் இணைத்த ஒரு பெரிய குழு.
தான்யா, சித்தி இத்னானி இருவரும் அழகாக நடித்திருக்கிறார்கள். அருண் விஜய் சார் ஆச்சர்யம் தந்து கொண்டே இருக்கிறார். படத்திற்காகப் பயங்கரமாக உழைக்கிறார். தயாரிப்பாளர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற கடுமையாக உழைப்பேன். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி..” என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசும்போது, “பாபி சார், மனோஜ் சார் பற்றி எல்லோரும் பேசினார்கள். இந்தப் படம் எனக்கு மிக நெருக்கமான படம். இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்த கதை. இதற்கு முன் மனோஜ் அண்ணா அனுப்பிய கதைகளைக் கேட்டிருக்கிறேன். நான் எப்போதும் ஆடியன்ஸ் மைண்ட்செட்டில் இருந்துதான் கதை கேட்பேன்.
திருக்குமரன் இந்தக் கதையைச் சொல்லி, தலைப்பு ‘ரெட்ட தல’ என்று சொன்னபோது அட்டகாசமாக இருந்தது. அவர் ஆரம்பத்திலேயே படத்திற்காகக் கடுமையாக உழைத்து வருவது எனக்குப் பிடித்துள்ளது. அவருக்காக நானும் கடுமையாக உழைப்பேன். சித்தி, தான்யா, ஆண்டனி சார், கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
இந்தப் படம் மீது இப்போதே நல்ல பாஸிடிவிட்டி இருக்கிறது. சாம் சி.எஸ். உடன் ஏற்கனவே வேலை பார்த்துள்ளேன். இந்தப் படம் அவருக்கு வெற்றிப் படமாக இருக்கும். உங்களை மகிழ்விக்கக் கண்டிப்பாக கடுமையான உழைப்பைத் தருவோம். இந்தப் படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும் நன்றி..” என்றார்.