full screen background image

இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் ‘ரஜினி’ திரைப்படம்..!

இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் ‘ரஜினி’ திரைப்படம்..!

‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனத்தின் தயாரிப்பாளரான வி.பழனிவேல் தற்போது ‘பாம்பாட்டம்’ படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்தத் தயாரிப்பாளரின் தயாரிப்பில் 13 வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் நடித்த வாத்தியார்’ படத்தை பிரபல இயக்குநரான A.வெங்கடேஷ்  இயக்கி அது மாபெரும் வெற்றியைப் பெற்றது. 

அதே வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் இப்போது இணைகிறது. இந்தப் புதிய படத்திற்கு “ரஜினி ” என்ற மந்திரப் பெயரை சூட்டியுள்ளனர்.

இந்தப் படத்தில் மஹாராஜா’ படத்தில் நடித்த விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையை சார்ந்த கைநாட்  அரோரா அறிமுகமாகிறார். 

முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

ஒளிப்பதிவு – மனோ V.நாயாரணன், வசனம் – அகில் பாபு அரவிந்த், இசை – அம்ரிஷ், கலை இயக்கம் – A.பழனிவேல், சண்டை இயக்கம் – சூப்பர் சுப்பராயன், மக்கள் தொடர்பு – மணவை புவன், இணை தயாரிப்பு  – அருண் துளி, சுபாஷ் R.ஷெட்டி, கோவை பாலசுப்ரமணி, தயாரிப்பு  – V.பழனிவேல், திரைக்கதை, இயக்கம் -A.வெங்கடேஷ்,

இந்த ரஜினி படம் பற்றி இயக்குநர் A.வெங்கடேஷ் பேசும்போது, “திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்க உள்ளேன். படத்தின் நாயகன் ரஜினி(விஜய் சத்யா) எதிர்பாராதவிதமாக ஒரு நாள் இரவில், ஒரு விபத்தினால் பல சிக்கல்களை சந்திக்கிறார்.

அது என்ன மாதிரியான சிக்கல்..? அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில்  நாய் ஒன்றும் நடிக்கிறது.

படத்தில் நாயகனின் பெயர் ‘ரஜினி பிரியன்’. ஆனால் அவரை நண்பர்கள் செல்லமாக ‘ரஜினி’ என்று அழைப்பார்கள். அதனால்தான் படத்திற்கு ‘ரஜினி’ என்று பெயர் வைத்துள்ளேன்…” என்றார் இயக்குநர் A.வெங்கடேஷ்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன்  துவங்கியது. தொடர்ந்து  சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளது.

Our Score