full screen background image

தயாரிப்பாளர் சி.வி.குமார் கன்னடத்தில் கால் பதிக்கிறார்..!

தயாரிப்பாளர் சி.வி.குமார் கன்னடத்தில் கால் பதிக்கிறார்..!

தமிழில் குறிப்பிட்டத்தக்க பல படங்களை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் அபினேஷ் இளங்கோவனின் அபி டிசிஎஸ் நிறுவனமும் இணைந்து கன்னட திரையுலகத்தில் கால் பதிக்கவுள்ளார்கள்.

இவர்கள் தயாரிக்கும் முதல் படத்தில் பிரபல கன்னட நடிகர் திக்நாத் மன்சாலே முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் கதிர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2-வது வாரத்தில் துவங்கவுள்ளது.

மேலும் தொடர்ந்து கன்னட படங்களையும் தெலுங்கு படங்களையும் இந்த கூட்டணி உருவாக்க உள்ளதாம்.

இதே நேரத்தில் தமிழில் இவர்களது கூட்டணியில் ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படம் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது..!

Our Score