‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் நிறுவனத்தின் தயாரிப்பாளரான T.சிவகுமார் அடுத்து மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கவிருக்கும் படம் ‘பக்கா.’
இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சரவணன், இசை – C.சத்யா, பாடல்கள் – யுகபாரதி, கலை – கதிர், நடனம் –தினேஷ், சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், படத் தொகுப்பு – ச்சி, தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார், தயாரிப்பு – T.சிவகுமார், எழுத்து, இயக்கம் – எஸ்.எஸ்.சூர்யா.
படம் பற்றி இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா பேசும்போது, “நான் இயக்குநர் பேரரசுவிடம் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறேன். இந்த ‘பக்கா’ திரைப்படம் ஒரு பக்கா கமர்ஷியல் கலந்த ஜாலியான படம். கிராமத்துக் கதையான இது, முதல் காட்சி முதல் கடைசி காட்சிவரையிலும் கலகலப்பான காமெடியில் இருக்கும்.
படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1-ம் தேதி தென்காசியில் துவங்குகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு 20 நாட்கள் குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது…” என்றார்.