தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது..!
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு, பல போராட்டங்களுக்கு பிறகு சுமார் 2 வருடங்கள் கழித்து தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டது
இந்தத் தேர்தலில் விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றி அமோக வெற்றியைப் பெற்று பதவியேற்றுக் கொண்டது.
அதன் பின்பு நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட முதல் நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று சென்னை தி குவாலிட்டி இன் ஹோட்டலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
வாக்கு எண்ணிக்கையை நடத்தி தந்த ஓய்வு பெற்ற நீதியரசர் திரு E.பத்மனாபன் அவர்களுக்கும், இவ்வழக்கில், சரியான முறையிலும்.. நியாயமான முறையிலும் தீர்ப்பளித்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், சங்கத்தின் சட்ட ஆலோசகர்களான மூத்த வழக்கறிஞர் திரு.கிருஷ்ணா திரு.ரவீந்திரன், மூத்த வழக்கறிஞர் திரு E. ஓம் பிரகாஷ், திரு M.K.கபீர், திரு சார்லஸ் டார்வின் மற்றும் பிரவீன் குமார் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
வழக்குகளுக்கு சட்ட ஆலோசகருடன் கலந்து ஆலோசனை வழங்கி உறுதுணையாக இருந்த திரு.பூச்சி முருகன், திரு.நாசர், திரு.விஷால், திரு.கார்த்தி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாநில உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் திரு முத்துகுமார், திரு அய்யனார் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்த இடமளித்த மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளி நிர்வாகத்திற்கும், வாக்குகளை எண்ண இடம் வழங்கிய Good Shepherd Covent-க்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சங்க வழக்கு, தேர்தல், வாக்கு எண்ணிக்கை என அனைத்திலும் உறுதுணையாக இருந்த ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள், மற்றும் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில், ‘நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை’-க்கு புதிய அறங்காவலர் குழு அமைக்க முடிவானது.
சங்கத்தின் தலைவரான நாசர் அறங்காவலர் குழுவில் நிர்வாக அறங்காவலராகவும், அறங்காவலர் குழு உறுப்பினர்களாக பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோரும், நடிகர் சங்கத்தின் செயற்குழுவிலிருந்து, ராஜேஷ், லதா சேதுபதி, கோவை சரளா மற்றும் பொதுக் குழுவிலிருந்து கமலஹாசன், பூச்சி முருகன், சச்சு (எ) சரஸ்வதி ஆகியோரையும் நியமிக்க, செயற்குழுவில் ஒப்புதல் கோரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கத்திற்கு சட்ட ஆலோசகராக வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் அவர்களை நியமிக்க செயற்குழுவின் ஒப்புதல் கோரப்பட்டு அத்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
சங்க அறக்கட்டளைக்கு கணக்கு தணிக்கையாளராக திரு கந்தசாமி & அசோஸியேட்ஸ் அவர்களை நியமனம் செய்ய செயற்குழுவின் ஒப்புதல் கோரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மக்கள் தொடர்பாளராக ஜான்சன் அவர்களை நியமனம் செய்ய செயற்குழுவில் ஒப்புதல் கோரப்பட்டு இந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இனிமேல் செயற்குழு கூட்டத்தை ஒவ்வொரு மாதம் இரண்டாவது ஞாயிற்றுகிழமை நடத்த வேண்டும் என்று செயற்குழுவில் ஒப்புதல் கோரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.