NOISE AND GRAINS நிறுவனம் சமீபத்தில் ‘ராக் வித் ராஜா’ எனும் இசைஞானி இளையராஜா அவர்களின் வெற்றிகரமான இசை நிகழ்ச்சி நடத்தியதைத் தொடர்ந்து, ‘இசையென்றால் இளையராஜா’ என்னும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி வரும் ஜூன் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மதுரை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் நடத்தவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களும், இசை ஞானியின் இசையினை நேரடியாக ரசிக்கும் வகையில், மிகவும் குறைந்த விலையில் நுழைவுக் கட்டணம், ஆரம்ப விலையாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
NOISE AND GRAINS நிறுவனம், இசைப் புயல் A.R.ரஹ்மான் அவர்களின் ‘நெஞ்சே எழு’, பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராமின் ‘ALL LOVE NO HATE’ இசை நிகழ்ச்சி, பின்னணி பாடகர் ஹரிஹரன் அவர்களின் ‘மடை திறந்து’, மறைந்த பின்னணி பாடகர் S.P.B. மற்றும் K.J.யேசுதாஸ் இணைந்து சிங்கப்பூரில் நடத்திய ‘VOICE OF லெஜெண்ட்’, பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், விஜயபிரகாஷ் அவர்களின் ‘மடை திறந்து’, ராக் ஸ்டார் அனிருத்தின் ‘LIVE IN SINGAPORE’ ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி இசை ரசிகர்களின், மனதை வருடிச் செல்ல வைத்தது.
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் , தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தமிழக கலை மற்றும் பண்பாட்டுத் துறையுடன் இணைந்து ‘நம்ம ஊர் திருவிழா’ நிகழ்ச்சியையும் மற்றும் பிரம்மாண்டமாய் ‘லெஜெண்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.