full screen background image

எமன் கட்டளை – சினிமா விமர்சனம்

எமன் கட்டளை – சினிமா விமர்சனம்

ஒரு சின்ன விஷயத்தை வைத்து ஒரு பெரிய திரைக்கதையை அமைத்து எமதர்மராஜாவையே துணைக்கு வரவழைத்து பார்க்கும்படியான ஒரு பீல் குட் மூவியாகக் இந்தப் படக் குழுவினர்!

நாயகன் அன்பு மயில்சாமியும், அர்ஜுனனும் இணைபிரியாத நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாட்டுத்தனமாக செய்த ஒரு செயல் ஒரு குடும்பத்தை சிதைத்து போடுகிறது.

ஒரு இளம் பெண்ணின் திருமணம் நின்று போய்விட இந்த அதிர்ச்சியில் அவளும் அவர்களுடைய தந்தையும் தற்கொலை செய்ய  முயல்கிறார்கள்.

இதைப் பார்த்த அன்புவுக்கு மிகப் பெரிய குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. தன்னால்தான் ஒரு குடும்பம் நாசமாகிப் போனதாக நினைத்தவர், அவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறார்.

இப்போது மேல் உலகம் செல்லும் அன்பு அங்கு எமதர்மராஜாவை நேருக்கு நேராக சந்திக்கிறார். நடந்த விஷயங்களை எல்லாம் புதிய ரீ கலெக்ட் செய்த எமதர்மராஜா “நீ செய்தது மிகப் பெரிய துரோகம். ஆனால் இந்த துரோகப் பழியை சரி செய்ய உனக்கு நான் ஒரு வாய்ப்பு தருகிறேன். 60 நாட்கள் உனக்கு மீண்டும் உயிர் தருகிறேன். இந்த 60 நாட்களுக்குள்ளாக அந்த பெண்ணுக்கு நீயே ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து விட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் 61 வது நாள் நீ மீண்டும் மேல் உலகம் வந்து விடுவாய்…” என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

இந்த அறுபது நாள் கான்செப்ட்டை கச்சிதமாக பிடித்துக் கொண்டு பூலோகம் திரும்பவும் அன்பு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி சகஜ நிலைமைக்கு வந்திருக்கும் நாயகி சந்திரிகா மற்றும் அவளது அப்பாவான டி.பி.கஜேந்திரன் குடும்பத்துடன் ஒன்றிணைகிறார்.

நாயகி சந்திரிகாவுக்காக பல மாப்பிள்ளைகளை பார்க்கிறார். ஆனால் சந்திரிகாவுக்கு அன்புவை மட்டுமே படித்திருக்கிறது. இந்த நேரத்தில் சந்திரிகாவின் தாய் மாமன் கராத்தே ராஜாவும் சந்திரிகாவை திருமணம் செய்து கொள்ள இன்னொரு பக்கம் திட்டம் தீட்டுகிறார்.

சரியான மாப்பிள்ளையில் அமையாமல் போவது இன்னொரு பக்கம்… காலக்கெடுவும் குறைந்து கொண்டே போகிறது.. கடைசியாக என்ன நடந்தது.. அந்த காலக்கெடுவுக்குள் சந்திரிகா திருமணம் நடந்ததா… அன்பு மீண்டும் மேல் உலகம் சென்றாரா.. எமதர்மனை சந்தித்தாரா… என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு சுவையான திரைக்கதை.

மக்கள் கலைஞர் மயில்சாமியின் மகனான அன்பு இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பை காட்டி இருக்கிறார், அவருக்கு துணையாக அர்ஜுனனும் சில பல  காமெடி வசனங்களை வீசி ஓரளவுக்கு அந்தக் கூட்டணியை பலப்படுத்தி இருக்கிறார்.

நாயகி சத்திரிகா ஒரு சுமாரான முகம் என்பதுதான் வருத்தமான ஒரு விஷயம். ஆனாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்தப் படம் ஒரு ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பாக தயாரிக்கப்பட்டது என்பதால் இந்த படத்தில் இருப்பவர்களில் ஒரு சிலர் இப்பொழுது உயிருடன் இல்லை என்பது சோகமான ஒரு விஷயம்.

டி.பி.கஜேந்திரன் நெல்லை சிவா மற்றும் பலரும் இப்போது உயிருடன் இல்லை என்றாலும் இந்தப் படத்தில் அவர்கள் காட்டியிருக்கும் நடிப்பு அந்த வசன உச்சரிப்பும், அவருடைய பெயரை அப்படியே பதிவு செய்து இருக்கிறது. இவ்வளவு சீக்கிரமாக இவர்கள் நம்மிடமிருந்து விடைபெற்றார்களே.. என்ற ஒரு வருத்தத்தையும் அவர்களுடைய நடிப்பு இந்தப் படத்தில் நமக்கு உணர்த்தி இருக்கிறது.

சசிகுமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அதில் இடைவேளைக்கு பின்பு வரும் இரண்டு பாடல்களின் பாடல் வரிகளும் மிக எளிமையாக இருக்க நிச்சயமாக இசையமைப்பாளரை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

சார்லி, நளினி, கராத்தே ராஜா, வையாபுரி, பவர் ஸ்டார், சங்கிலி முருகன் என்று ஒரு பெரிய குணச் சித்திர நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பினை இந்தப் படத்தில் காண்பித்து இருக்கிறார்கள்.

கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவும் சிம்ப்ளி சூப்பர். ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கு உண்டான ஒளிப்பதிவினை குறை இல்லாமல் கொடுத்து இருக்கிறார்.

படத்தை எழுதி இயக்கி இருக்கியிருக்கும் ராஜசேகர் கொஞ்சம் காமெடியும் கொஞ்சம் சென்டிமென்ட் கலந்து ஒரு பெண்ணை திருமண வாழ்க்கை முறிந்து போனால் அதனால் அந்த குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும்.. வேதனைப்படும்..? அந்த பெண்ணின் மனது எந்த அளவுக்கு துன்பப்படும் என்பதை முதல் பாதியில் சொல்லிவிட்டு…

பின் பாதியில் தானே அந்தப் பாவத்தை போக்குவதற்காக மாப்பிள்ளை பார்த்து வைக்கும் ஒரு கடமையும் அவர்களுக்கு உண்டு என்பதை உணர்த்துகின்ற விதத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறார். இதற்காகவே இயக்குநரை நாம் வெகுவாகப் பாராட்ட வேண்டும்.

ஒரு சாதாரண சின்ன ஒரு கதையை வைத்துக் கொண்டு சுவாரசியமான திரைக்கதையில் மிக அழகான பாடல்களுடன் ஒரு நல்லதொரு படத்தை குடும்பப் படத்தை குடும்பத்தோடு பார்க்கக் கூடிய அளவுக்கு இயக்கி தந்திருக்கும் இந்த இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

நிச்சயம் இந்தப் படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்து மகிழலாம்.

RATING : 2.5 / 5

Our Score