full screen background image

ZEE-5-ல் வெளியாகும் போலீஸ் கதையில் உருவான ‘வாரண்ட்’ வெப் சீரீஸ்!

ZEE-5-ல் வெளியாகும் போலீஸ் கதையில் உருவான ‘வாரண்ட்’ வெப் சீரீஸ்!

தமிழ் ZEE-5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது.

இந்தத் தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார்.

இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் பிரசாந்த் பாண்டியராஜ் மேற்கொண்டுள்ளார்.

மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் இணைந்து, கதைக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் வழங்குகின்றனர்.

‘வாரண்ட்’ தொடர், அன்றாட போலீஸ் வழக்குகளின் கவனிக்கப்படாத உலகை ஆராய்கிறது. அவை மெதுவாக ஆபத்தான நிலைக்கு மாறும் விதத்தையும் காட்டுகிறது.

இந்தக் கதை, ‘கோட்டை கருப்புசாமி’ என்ற இரண்டாம் நிலை காவலரை மையமாகக் கொண்டு நகர்கிறது.

அவரின் பெறும் அவமானங்களும், பயமும், அவர் சட்டத்தை எவ்வாறு அமல்படுத்துகிறார் என்பதைக் கட்டமைக்கின்றன.

இதன் மூலம் அதிகாரம், ஆட்சித்தன்மை மற்றும் நீதி எப்போது மங்குகிறது என்பதைக் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

இந்த தொடரின் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ் கூறியதாவது:

“கோட்டை கருப்புசாமி என்பவர் பாராட்டப்பட வேண்டிய ஹீரோ அல்ல. அவர் நெகிழ்வானவர். மிகுந்த மனிதத் தன்மை கொண்டவர். அவருடைய நேர்மை என்னை பயமுறுத்தியது, அதனால்தான் நான் அந்தக் கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன்.

ஒரு படைப்பாளியாக, வெளிப்படையான காட்சிகளுக்கு பதிலாக உண்மையை நான் எப்போதும் விரும்புகிறேன்.

இந்த ‘வாரண்ட்’ தொடரில் நடித்தது, நான் பொதுவாக கேமராவின் பின்னால் மட்டும் ஆராயும் உணர்வுகளை நேரடியாக எதிர்கொள்ள வைத்தது.

தமிழ் ZEE-5 இந்தக் கதைக்கு அதன் இயல்பான, நேர்மையான வடிவத்தில் வெளிப்பட இடமளித்தது.

பார்வையாளர்கள் கோட்டை கருப்புசாமியின் பயணத்தை வெறும் பார்ப்பதற்காக அல்ல, அதை உணரவும், சிந்திக்கவும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

மே 22 முதல் தமிழ் ZEE5-ல் ‘வாரண்ட்’ தொடரைப் பார்க்க தயாராக இருங்கள்.

ZEE5 பற்றி:

ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழிக் கதை சொல்லியாகும். இது ZEE என்டர்டெயின்மெண்ட் என்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதி ஆகும். இது 4,071+ திரைப்படங்கள், 1,800+ தொலைக்காட்சி தொடர்கள், 422+ வலை ஒரிஜினல்கள், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கும் மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான தொகுப்பை வழங்குகிறது.

இந்த உள்ளடக்கம் 12 மொழிகளில் 7 தனிப்பயன் மற்றும் ஹைபர்-லோகல் சந்தா திட்டங்களின் மூலம் வழங்கப்படுகிறது – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஓடியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி. இதில் ஒரிஜினல்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் நேரலை டிவி ஆகியவை அடங்கும்.

உலகளாவிய தொழில் நுட்ப கூட்டாண்மைகளின் மூலம் உருவான வலுவான டீப்-டெக் அமைப்பு, பல சாதனங்கள், எகோசிஸ்டம்கள் மற்றும் இயங்குதளங்களில் ZEE5-ஐ சீரான அனுபவத்துடன் வழங்க உதவுகிறது. Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

Our Score