தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அரிதாரம் பூசவிருக்கிறார்.
தனது இளைய மகன் சண்முக பாண்டியனை சகாப்தம் படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். படம் ஓடவில்லையென்றாலும் மகனுக்காக இன்னுமொரு முயற்சியில் தானே களத்தில் குதித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்தும் அவரது மகன் சண்முக பாண்டியனும் இணைந்து ‘தமிழன் என்று சொல்’ எனும் படத்தில் நடிக்க உள்ளனர்.
இந்தப் படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
இசை – ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, ஒளிப்பதிவு – கொலஞ்சி குமார், சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, எடிட்டிங் – வரதராஜன், கலை -விஜய ஆதிநாதன், நடனம் – பிருந்தா, தினேஷ், ஸ்ரீதர், VFX- மோகன். இப்படத்தை புதுமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பூஜை வரும் நவம்பர் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது.
தேர்தலுக்குள்ளாக படத்தை எடுத்து முடித்து வெளியிட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்..!
படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..