full screen background image

ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் – மீண்டும் உறுதிப்படுத்துகிறார் பி.வாசு..!

ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் – மீண்டும் உறுதிப்படுத்துகிறார் பி.வாசு..!

இன்னும் எத்தனை திருப்பங்களைச் சந்திக்கப் போகிறதென்று தெரியவில்லை இயக்குநர் பி.வாசுவின் ‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்கைகளும்’ படம்..!

p-vasu

சென்ற ஞாயிற்றுக்கிழமைதான் இப்படியொரு படத்தை இயக்கப் போவதாக அறிக்கையாகவே வெளியிட்டார் பி.வாசு. கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமா பீல்டில் இருப்பவர். பெரிய இயக்குநர். அறிக்கையே வெளியிடுகிறார். அப்போ அது உண்மையாகத்தானே இருக்கும் என்ற நினைப்பில்தான் அனைத்து ஊடகங்களும் இந்தச் செய்தியை வெளியிட்டன.

அடுத்த நாளே ஐஸ்வர்யா ராயின் மக்கள் தொடர்பு நிறுவனமான பச்சன் பாஹூ, வெளியிட்ட ஒரு அறிக்கையில் “ஐஸ்வர்யா ராய் தினம்தோறும் நிறைய கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்.  அதில் பி.வாசுவின் கதையும் ஒன்றாக இருக்கலாம்.. ஆனால் ஐஸ்வர்யா இன்னமும் எதிலும் நடிக்க எந்தவிதத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை..” என்று பட்டும், படாமல் கூறியிருக்கிறது..

இப்போது மீண்டும் பந்து பி.வாசுவிடம்.. இன்றைக்கும் செய்தியாளர்களிடம் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் பி.வாசு.

“நான் மும்பை சென்று ஐஸ்வர்யா ராயை நேரில் சந்தித்தது உண்மை. கதையை முழுமையாக அவரிடம் விளக்கினேன். அவருடைய கேரக்டர் பற்றிச் சொன்னேன். தனக்குப் பிடித்திருப்பதாகவும், தான் இதில் நடிப்பதாகவும் அவர் உறுதியாக என்னிடம் சொன்னார். படத்தின் துவக்க வேலைகளுக்காக சுமார் 8 மாதங்கள் ஆகலாம் என்பதால் அதன் பிறகுதான் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் என்பதையும் அவரிடம் சொல்லிவிட்டேன். அதோடு படத்தின் விளம்பரத்திற்காக வெகு சீக்கிரமாகவே இந்தப் படத்தில் நீங்கள் நடிக்கப் போவதை வெளியிட வேண்டிய சூழல் இருப்பதையும் அவரிடம் தெரிவித்துவிட்டுத்தான் வந்தேன்..” என்று இன்றைக்கும் சொல்கிறார் இயக்குநர் பி.வாசு..

இதுக்கு பதில் எங்கேயிருந்து வரும்ன்னு தெரியலை…!

உண்மையில் என்ன நடந்திருக்குமெனில்

1. பி.வாசு, ஐஸ்வர்யாராயிடம் கதையைச் சொல்லியிருக்கலாம். இதனை அவர்களுடைய பி.ஆர்.ஓ. ஏஜென்ஸியும் மறைமுகமாக ஒத்துக் கொள்கிறது..!

2. படத்திலும் நடிப்பதை ஐஸ்வர்யா ராய், பி.வாசுவிடம் உறுதிப்படுத்தியிருக்கலாம்.

3. ஆனால் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதை மட்டும் இப்போதைக்கு வெளியில் சொல்லாமல் இருக்க நினைக்கிறார் ஐஸ்வர்யா..

4. ஏனெனில், வேறு சில படங்களுக்கு அவர் இதுபோல் வாக்குறுதி அளித்திருக்கலாம். அல்லது சில படங்களைத் தவிர்க்க வேண்டி நடிக்கவில்லை என்று சிலரிடம் சொல்லியிருக்கலாம். “என் படத்துல நடிக்கலை.. தென்னிந்திய மொழிக்கு போறீங்களா..?” என்று சிலர் கோபிக்கலாம் என்பதால் ஐஸ்வர்யா ராய், இதனை இப்போது சம்பிரதாயத்துக்கு மறுக்கிறார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

மறுபடியும் முதல்ல இருந்தா..?  உஷ்.. ஒரு சோடா ப்ளீஸ்..!

Our Score