full screen background image

சினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..!

சினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..!

நடிகை வனிதா விஜயகுமார் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி சென்ற மாதம் வெளியானது. ஏதாவது ஒரு படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் அல்லது குணச்சித்திர கதாபாத்திரமாக அக்கா, தங்கை கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய அல்வாவை கொடுத்திருக்கிறார் வனிதா.

இப்போது ஒரு படத்தில் நாயகியாகவே நடிக்கவிருக்கிறார் வனிதா. அந்தப் படத்தின் பெயர். ‘2K அழகானது காதல்.’

யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பதுகூட இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மிகப் பிரபலமான சாதி சங்கத்தின் பிரமுகரும், ‘பனங்காட்டு படை’ என்ற கட்சியை நடத்தி வரும் ஹரி நாடார் என்பவருக்கு ஜோடியாகத்தான் இந்தப் புதிய படத்தில் நடிக்கிறார் வனிதா.

இந்த ஹரி நாடார் தமிழகம் முழுவதும் ஏகத்திற்கும் பிரபலமானவர். காரணம், அவர் எப்போதும் உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து கொண்டு வலம் வருபவர். இந்தத் தோற்றத்திற்காகவே அவர் விநோதமாக பார்க்கப்படுபவர்.

இவர் ஒரு வகையில் வனிதாவுக்கும் சொந்தக்காரர்தானாம். இது நேற்றைக்குத்தான் வனிதாவுக்கே தெரிய வந்துள்ளதாம்.

ஏற்கெனவே வனிதா இயக்குநர் ஆதம் தாசன் இயக்கத்தில் ஹீரோயினை மையப்படுத்திய அனல் காற்று’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடன் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது ஹரி நாடாருக்கு ஜோடியாக ‘2K அழகானது காதல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் முத்தமிழ் வர்மா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை வட பழனியில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் பூஜையுடன் நேற்று தொடங்கியது. இந்த பூஜை நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார், “கொரோனாவுக்குப் பின் படங்கள் ஆரம்பிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் திரையுலகின் ஜாம்பவான் ஆர்.பி.சவுத்ரியை நீண்ட வருடத்துக்குப் பின் சந்தித்தது என் அப்பா, அம்மாவை பார்த்தது போல் இருக்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெள்ளித்திரையில் சில படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிடித்த கதைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டு நடிக்கிறேன். இந்தப் படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. இயக்குநர் கதை சொன்னவிதம் அருமையாக இருந்தது.

கிராமத்தில் இருக்கக் கூடிய சின்னச் சின்ன விஷயங்கள், காதல் சம்பந்தப்பட்ட அதாவது ஒரு பருவத்தில் ஆரம்பித்து, அடுத்தப் பருவம் வரையிலான அதன் பயணம் பற்றிய மிகவும் அழகான கதை இது. அதில் நான் ஒரு முக்கிய கேரக்டரில் ஹரி நாடார் உடன் நடிக்கிறேன்…” என்றார்.

Our Score