full screen background image

உத்தரப்பிரதேச தமிழர்களின் வாழ்க்கை பற்றிய படம் ‘உருமல்’

உத்தரப்பிரதேச தமிழர்களின் வாழ்க்கை பற்றிய படம் ‘உருமல்’

டபுள் எஞ்சின் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ராஜேஷ் தயாரிப்பில் இயக்குநர் கிரவுன் ராஜேஷ் இயக்கும் ‘உருமல்’ படத்தின் துவக்க விழா இன்று காலை 10 மணிக்கு கேரளாவில் இனிதே நடைபெற்றது.

இப்படத்தில் நாயகனாக குருகாந்த், கார்த்திக்ஶ்ரீ, ராம் ராஜேஷ் ஆகியோர் நடிக்க நாயகியாக ஷிவன்யா ராணி நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜா சாகிப், கவுன்கள் சுரேஷ், ஆனந்தா மூடர் மற்றும் ஸ்ரீதேவி அணில் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை – கிரவுன் ஜே.ஆர்., சண்டை பயிற்சி – புரூஸ்லி ராஜேஷ், கலை இயக்கம் – விஜயன் சேட்டையன், எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத் தொகுப்பு – கிரவுன் ராஜேஷ்.

உத்திரபிரதேசத்தில் வாழும் தமிழர்கள் அவர்களின் வாழ்வுரிமைக்காக போராடும் போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளது

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் உத்திரபிரதேசத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது

Our Score