full screen background image

‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிக்கும் ‘நீ சுடத்தான் வந்தியா’ திரைப்படம்..!

‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிக்கும் ‘நீ சுடத்தான் வந்தியா’ திரைப்படம்..!

‘டிக் டாக்’ உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ் பெற்றவர் நடிகை இலக்கியா. அவர் தற்போது தமிழ்த் திரையுலகில் ‘நீ சுடத்தான் வந்தியா?’ என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படத்தை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.  அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். இலக்கியா நாயகியாக நடிக்கிறார். மேலும் விஜய் டிவி’ புகழ் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி போன்றோரும் நடிக்கிறார்கள்.

படத்திற்கு செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். துரைராஜன் இசையமைக்கிறார். படத் தொகுப்பு செய்து படத்தை இயக்குபவர் க.துரைராஜ். இவர் இயக்குநர் பிரவீன் காந்தியிடம்  சினிமா கற்றவர். படத்தில் ஐந்து பாடல்கள், இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் க.துரைராஜ் கூறும்போது “தனது மகளுக்குத் திருமணப் பரிசாக ஒரு பங்களாவை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார் தந்தை. வாங்குவதற்கு முன் அதை போய்ப் பார்த்து விட்டு வருமாறு மகளை வருங்காலக் கணவருடன் அனுப்பி வைக்கிறார்.

அந்த பங்களா காட்டுப் பகுதியில் உள்ளது.  பார்க்கப் போனபோது உள்ளே நுழைந்ததும்  அவர்களுக்குள் ஓர் அமானுஷ்ய சக்தி புகுந்து கொண்டு அவர்களை ஆட்டி வைக்கிறது. அது மட்டுமல்ல அவர்கள் மூலம் தனது எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

கதையின் பெரும் பகுதி காடுகளில் நடக்கிறது. பல்வேறு காடுகளில் சிரமப்பட்டுப் படம் பிடித்தோம். சிறு பகுதி மட்டும் சென்னையில் படமானது.

டிக் டாக்கிற்காக வீடியோவில் தோன்றி நடிப்பது வேறு .படத்தில் காட்சிகளில் நடிப்பது வேறு. இலக்கியாவுக்கு ஆரம்பத்தில் சில நாட்கள் நடிப்பதில் சிரமம் இருந்தது. போகப் போக சரியாகிவிட்டது. சில நாட்களில்  நான் சொல்வதைப் புரிந்து கொண்டு சரியாக நடித்தார்.

இந்தப் பட அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாக இலக்கியா கூறினார். டிக் டிக் போல மிகையாக இல்லாமல் இந்தப் படத்தில் தேவையான அளவுக்கு நாகரிகமான வகையில் கவர்ச்சியைக் காட்டியிருக்கிறார்…” என்றார்.

பரபரப்பு, சஸ்பென்ஸ், கவர்ச்சி என வணிகக் கலவையில் உருவாகியுள்ளது இந்த ‘நீ சுடத்தான் வந்தியா?’ திரைப்படம்.

Our Score