full screen background image

விக்ரம் பிரபு, ஹன்ஸிகா நடிக்கும் ‘துப்பாக்கி முனை’ திரைப்படம்..!

விக்ரம் பிரபு, ஹன்ஸிகா நடிக்கும் ‘துப்பாக்கி முனை’ திரைப்படம்..!

‘60 வயது மாநிறம்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் ‘துப்பாக்கி முனை’.

இத்திரைப்படத்தினை வி.கிரியேஷன்ஸ்  சார்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளார். 

இத்திரைப்படத்தின் மூலமாக ஹன்சிகா மோத்வானி, முதன் முறையாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

‘துப்பாக்கி முனை’யின் முக்கிய கதாபாத்திரங்களில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், ‘மிர்ச்சி’ ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ராசாமதி, இசை – எல்.வி.முத்து கணேஷ், படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், சண்டை இயக்கம் – அன்பறிவ், கலை இயக்கம் – மாயபாண்டி, பாடல்கள் – புலமைப்பித்தன், பா.விஜய், ஒலி வடிவமைப்பு – லட்சுமி நாராயணன், உடைகள் – பெருமாள் செல்வம், 2-வது யுனிட் இயக்குநர் – எம்.செந்தில் விநாயகர், ஒப்பனை – நெல்லை வி.சண்முகம், ஸ்டில்ஸ் – முன்னா, விஷூவல் எபெக்ட்ஸ் – பிரவின்-டி.ஜெகதீஷ், கிராபிக்ஸ் – சேது, தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.வெங்கடேசன், மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு.

இந்தியாவின் மிகச் சிறந்த கதாசிரியர்களில் ஒருவரான ‘அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும், ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கிய இயக்குநருமான தினேஷ் செல்வராஜ், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். 

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுண்ட்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். தன் வாழ்க்கையை மாற்றிப் போட்ட ஒரு வழக்கினை விக்ரம் பிரபு தீர விசாரிப்பதுதான் படத்தின் கதை.

‘’செண்டிமெண்ட் மற்றும் ஆக்க்ஷனுக்கு முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் முக்கியமான சமூகப் பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளதாக’’ படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு கூறுகிறார்.

‘’கதைத் தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருந்த நேரத்தில், ‘துப்பாக்கி முனை’ படத்தின் கதையும், கதைக் களமும் வித்தியாசமாக இருந்ததால் இப்படத்தில் நடித்ததாக’’ நாயகன் விக்ரம் பிரபு கூறுகிறார்.

‘‘படத்தின் பெரும்பாலான காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடித்திருக்காத ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இது ரசிகர்களுக்கு ஒரு விசேஷ ட்ரீட்டாக அமையும்..’’ என்று படத்தின் ஒளிப்பதிவாளரான ராசாமதி கூறினார்.

vikram prabhu

படம் பற்றி இயக்குநர் தினேஷ் செல்வராஜ் பேசும்போது, “சட்டத்தை இந்த சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது. ஆனால் நான் வாளாக பயன்படுத்துகிறேன். முன்பு வறுமைதான் குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம்தான் குற்றவாளிகளை உருவாக்குகிறது.

தேசத்தந்தை காந்தியை சுட்ட துப்பாக்கியைத் தவிர, சமுதாயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசாரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்புமிக்கவை என்பது என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்ட்டான போலீஸ் ஆபீஸர் பிர்லா போஸின் தலையாய கருத்து.

தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன..? பெற்றது என்ன..? என்பதே இந்த ‘துப்பாக்கி முனை’யின் கதை சுருக்கம்.

போலீஸ் அதிகாரி பிர்லா போஸ் கதாபாத்திரத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம் பிரபு சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் கதையும், விக்ரம் பிரபுவின் வித்தியாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம்’’ என்கிறார் இயக்குநர் தினேஷ் செல்வராஜ்.  

மும்பை, டெல்லி, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர் படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் மொத்த படப்பிடிப்பினையும் முடித்துள்ளனர்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் கிரீஸ் நாட்டில் உள்ள மாசிடோனியாவில் நடைபெற்று வருகிறது. ‘கபாலி’, ‘வி.ஐ.பி.-2’ படங்களுக்கு பிறகு ‘துப்பாக்கி முனை’ படத்தின் இசைக் கோர்ப்பு அங்கு நடைபெறுவது குறிப்படத்தக்கது.

 

Our Score