full screen background image

‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மாநில அரசின் 6 விருதுகளை வென்றது

‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மாநில அரசின் 6 விருதுகளை வென்றது

விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், துளசி நடிப்பில் தயாரிப்பாளர் எம்.ஆர்.கணேஷ் தயாரிப்பில் சி.யு.அருண்குமார் இயக்கத்தில் உருவாகி 2013-ம் ஆண்டு வெளியான படம் பண்ணையாரும் பத்மினியும்’.

இந்தப் படம் 2013-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் 6 விருதுகளை அள்ளியுள்ளது.

சிறந்த படத்திற்கான 3-வது பரிசு

சிறந்த நடிகர் சிறப்பு பரிசு – விஜய் சேதுபதி.

சிறந்த குணச்சித்திர நடிகர் – ஜெயப்பிரகாஷ்.

சிறந்த குணச்சித்திர நடிகை – துளசி.

சிறந்த பின்னணி பாடகர் – எஸ்.பி.சரண்.

சிறந்த பின்னணி பாடகி – சந்தியா ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

இது  பற்றி தயாரிப்பாளர் கணேஷ் பேசும்போது, “திரைப்பட கல்லூரியில் படித்து, கதாநாயகனாக சில படங்களில் நடித்துவிட்டு அதன் பின்புதான் தயாரிப்பாளராக முடிவெடுத்தேன்.

நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தயாரிக்க வேண்டும் என நினைத்து, பின்பு சிம்புவின் அன்பினால்.. ஆதரவால் ‘வானம்’ படத்தை தயாரித்தேன்.

இதையடுத்து, அனைவரும் பாராட்டிய ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தையும் தயாரித்தேன். இப்படத்திற்கு தமிழ்நாடு அரசு திரைப்பட 6 விருதுகள் கிடைத்துள்ளது. நல்ல படங்களுக்கு இப்படி பட்ட விருதுகள் ஒரு எனர்ஜியை கொடுக்கும். விருதுகள் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாயகனாக நடித்து எனக்கு உறுதுணையாக இருந்த விஜய்சேதுபதி அவர்களுக்கு நன்றி. இயக்குநர் அருண்குமார் மற்றும் படத்தில் பங்கு பெற்ற நடிகை நடிகைகள், டெக்னீஷியன் அனைவருக்கும் நன்றி. ஊக்கம் அளித்த பத்திரிகை, ஊடகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..” என்றார்.

தற்போது இவருடைய தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வணங்காமுடி’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

 
Our Score