தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
இந்தப் புதிய படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை V கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு தயாரிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா நாயகியாக நடிக்கிறார். யாமினி யக்ன மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத் தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை இயக்கம் R.K.விஜய் முருகன்.
இயக்கம் – செல்வராகவன், தயாரிப்பு – V கிரியேஷன்ஸ் – கலைப்புலி S.தாணு, படத் தொகுப்பு – புவன் ஸ்ரீனிவாசன், ஒளிப்பதிவு – யாமினி யக்ன மூர்த்தி, தயாரிப்பு மேற்பார்வை – S.வெங்கடேசன், ஆடை வடிவமைப்பு – காவ்யா ஸ்ரீராம், ஒப்பனை – நெல்லை V.சண்முகம், நிழற் படம் – தேனி முருகன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.
இந்தப் படம் இன்று காலை சென்னையில் பூஜை நிகழ்வுடன் துவங்கியது. இந்த பூஜை நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ், நாயகி இந்துஜா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கஸ்தூரி ராஜா மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.