உயிர் வாழப் பணம் தேவைதான்… பல உயிர்கள் பறி போவதே அதனால்தான். வேண்டும்போதெல்லாம் பணம் எடுக்க வசதி செய்து கொடுத்த வங்கிகள் மனிதனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கிறதா..? பதிவு செய்யத் தெரிந்த கேமிராவுக்குப் பாதுகாக்கத் தெரியுமா..? திரும்பப் பெற முடியாத உயிர்களை மதிப்போம்.! இந்த கருத்தை கதைக் கருவாக அமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் படமே இந்த ‘மய்யம்’ திரைப்படம்.
நமக்கு தேவைப்படும் பணத்தை நினைத்த நேரத்தில் எடுக்க உதவும் ATM மையத்தில், சில நேரங்களில் ஏற்படும் கொலை, கொள்ளை போன்ற அசம்பாவிதங்கள் மனிதனுக்கு எவ்வாறு ஆபத்தாகின்றன என்பதை சமுக அக்கறையுடன் கூறியுள்ளனர் இந்த ‘மய்யம்’ படக் குழுவினர்.
ஹார்வேஸ்ட் எண்டர்டெயின்னர்ஸ் மற்றும் ஸ்கெட்ச் புக் ப்ரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் 27 கலைஞர்கள் அறிமுகமாகியுள்ளனர். அதில் 12 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது இப்படத்தின் தனி சிறப்பாகும்.
Against ATM Murder என்ற தலைப்பிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒவியத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகை கவுதமி இருவரும் கையொப்பமிட்டு ‘மய்யம்’ படக் குழுவினரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இன்றைய உலகத்திற்கு மிகவும் தேவையான கருத்தை சொல்லியிருக்கும் இந்த ‘மய்யம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது.