சில ஆண்டுகளாக இணைய உலகத்தில் வலம் வரும் அதிசயம், ப்ளஸ் ஆச்சரியப்படவைக்கும் வீடியோ இது.
லூயில் மல்லீ என்ற புகழ் பெற்ற பிரெஞ்ச் இயக்குநர் 1968-ம் வருடம் இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள் பற்றி 7 ஆவணப் படங்களைத் தயாரித்தார். அதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்தார் லூயிஸ். சென்னைக்கும் வந்திருந்தார்.
அப்படி அவர் சென்னை வந்திருந்தபோதுதான் தில்லானா மோகனாம்பாள் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அந்த வேளையில் அந்த ஷூட்டிங் காட்சிகளையும் தனது ஆவணப் படத்திற்காக படமாக்கியுள்ளார்.
விலை மதிக்க முடியாத இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும்போது இன்றைய நிகழ்வுகளை பதிவு செய்து வைப்பது எவ்வளவு சிறந்த செயல் என்பது புரிகிறது.. நமது அடுத்தத் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் உயரிய சொத்துகள் இவைதான் என்பதும் புரிகிறது..!
லூயில் மல்லீக்கு நன்றி..!