full screen background image

‘கோமாளி’ பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாகிறார்

‘கோமாளி’ பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாகிறார்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி’. 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தினை இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.

இந்தக் ‘கோமாளி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

விஜய், தனுஷ் உள்ளிட்ட பலருடைய படங்களை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், எதுவுமே இறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தற்போது ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் உறுதியாகியுள்ளது. ஆனால் இந்தப் படத்தை இவர் இயக்கவில்லை. நாயகனாகவே நடிக்கிறார் என்பதுதான் சுவையான செய்தி. இந்தப் படத்தை AGS Entertainment நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி பிரதர்ஸ் தயாரிக்கின்றனர். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Our Score