full screen background image

‘கத சொல்லப் போறோம்’ – திரை முன்னோட்டம்

‘கத சொல்லப் போறோம்’ – திரை முன்னோட்டம்

ரிலாக்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘கத சொல்லப் போறோம்.’ இந்தப் படத்தை எஸ்.கல்யாண், ஜே.ஜெயகிருஷ்ணன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். E 5 எண்டர்டைன்மென்ட்ஸ் இந்தியா (பி )லிட் நிறுவனம் இதனை வெளியிடவுள்ளது.

இந்தப் படத்தில் ‘ஆடுகளம்’ நரேன், விஜயலட்சுமி, ‘முண்டாசுப்பட்டி’ காளி, ‘பசங்க’ சிவகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த், அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜுன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஜெபின்

இசை – பவன்

பாடல்கள் – கல்யாண், வினோதன்

கலை – பத்மநாபன்

நடனம் – எஸ்.எல்.பாலாஜி

எடிட்டிங் – விஜய்

தயாரிப்பு நிர்வாகம் பெருமாள்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் எஸ்.கல்யாண்.

படம் பற்றி இயக்குநர் எஸ்.கல்யாண் சொல்லும்போது, “இந்தப் படம் ‘பசங்க’ படம் போல் சிறுவர், சிறுமிகளை பற்றிய படம். அனாதை ஆசிரமத்து மாணவர், மாணவிகளுக்கும், பக்கத்தில் உள்ள வசதியான பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கும் இடையே நடக்கும் செண்டிமெண்ட் கலாட்டாதான் கதை! இத்துடன் குழந்தை திருட்டையும், அதனால் பெற்றோர்கள் படும் வேதனையையும் இதில் பதிவு செய்திருக்கிறோம். சென்டிமெண்டில் இப்படம் உச்சத்தைத் தொடும். என்னுடைய முதல் படத்திலேயே குழந்தைகளை வைத்து படமெடுத்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..” என்றார்.

படத்தை வாங்கி வெளியிடும் E 5 எண்டர்டைன்மென்ட்ஸ் இந்தியா (பி )லிட் ஜே.ஜெயகிருஷ்ணன் பேசும்போது, “படத்தை பார்த்தவுடன் நெகிழ்ந்து போனேன். இப்படியொரு உணர்ச்சிபூர்வமான படத்தை தமிழக மக்கள் மட்டுமல்ல எல்லா மொழி மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். மனதை உருக்கி மட்டுமல்ல உலுக்கி எடுக்கும் விதமான செண்டிமெண்ட் படம் இது. நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும்..” என்றார்.

Our Score