full screen background image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது மான நஷ்ட வழக்கு – ஜிகர்தண்டா தயாரிப்பாளர் முடிவு..!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது மான நஷ்ட வழக்கு – ஜிகர்தண்டா தயாரிப்பாளர் முடிவு..!

‘ஜிகர்தண்டா’ பட விவகாரம் தொடர்பாக 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக அந்தப் படத்தினை தயாரித்த பைவ் ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரா கலைச்செல்வி கூறியிருக்கிறார்.

Jigarthandaa-Case-2

பாபி சிம்ஹா – சித்தார்த் – லட்சுமி மேனன் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்த படம் ‘ஜிகர்தண்டா’. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்த்து.

சமீபத்தில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கதிரேசன் தனக்குத் தெரியாமல் ‘ஜிகர்தண்டா’ படத்தின் இந்தி உரிமையை விற்க முயல்வதாகக் கூறி அதற்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். நீதிமன்றமும் இந்தி மொழி உரிமையை விற்கக் கூடாது என்று இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருந்த்து. இப்போது அந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறதாம்.

இந்தத் தகவலை இந்த படத்தை தயாரித்த ‘பைவ் ஸ்டார் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் இது பற்றி மேலும் கூறுகையில், “ஜிகர்தண்டா’ படம் பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுமென்றே படப்பிடிப்பினை தாமதப்படுத்தியவகையில் ஏறத்தாழ 1 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

kathiresan-1

மேலும், கார்த்திக் சுப்புராஜ் எங்கள் நிறுவனத்தின் மீது அவதூறாகவும், எங்களை இழிவுபடுத்தும்விதமாகவும் தொடர்ந்து செய்திகள் பரப்பியதால் இன்றுவரை தெலுங்கு ‘டப்பிங்’ உரிமையை எங்களால் விற்கவே முடியவில்லை. அந்த வகையில் எங்கள் நிறுவனத்துக்கு மேலும் 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

kathiresan-2-a

கார்த்திக் சுப்புராஜ் எங்கள் நிறுவனத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி ‘ஜிகர்தண்டா’ படத்தின் கதை மற்றும் அனைத்து உரிமைகளையும் ஏற்கனவே எங்களுக்கு கொடுத்தாகி விட்டது. இப்போது வேண்டுமென்றே, தவறான தகவல்களை வெளியில் பரப்பி உண்மைக்கு புறம்பானவற்றை கூறி உயர்நீதிமன்றத்தில் எங்கள் மீது வழக்கு தொடுத்தார்.

kathiresan-3

நாங்கள் ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் இந்தி மொழி உரிமையை தனக்கு தெரியாமல் தயாரிப்பாளர் விற்க முயற்சி செய்வதாகவும், திரைப்படத்தின் உரிமை தன் வசமே இருப்பதாகவும், அந்த வகையில் தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கி மற்றும் நஷ்டஈடாக 40 லட்சம் வழங்கக் கோரியும் வழக்கினை தொடுத்திருந்தார். மேலும், இந்தி மொழி உள்பட வேறு எந்தவொரு மொழி மாற்று உரிமையையும் யாருக்கும் விற்கக் கூடாது என்று ஒரு தடை உத்தரவையும் வாங்கியிருந்தார்.

இந்த தடை உத்தரவை எதிர்த்து எங்களது தயாரிப்பாளர் கதிரேசன் எதிர் மனு தாக்கல் செய்தார். அதில் தடை உத்தரவை நீக்கக் கோரி கேட்டிருந்தார். எங்களுடைய கோரிக்கையின்படி மேற்படி தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது நீக்கி இருக்கிறது.

kathiresan-4

கார்த்திக் சுப்புராஜ் எங்கள் மீது மீண்டும், மீண்டும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் மீது எங்கள் நிறுவனத்தின் சார்பாக 5 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறோம்..” என்றார்.

எதுக்கு சாமிகளா கோர்ட்டு கேஸுன்னு வெட்டியா அலைஞ்சுக்கிட்டு..? 

மதுரைக்கு போனீங்கன்னா அங்க வில்லாபுரத்துல ‘அசால்ட்டு சேது’ன்னு ஒருத்தர் இருக்காரு. இது மாதிரியான கேஸ்களையெல்லாம் தன்னோட ஸ்பெஷல் கோர்ட்ல ஒரே நாள்ல விசாரிச்சு பைசல் பண்ணி அனுப்பிருவாரு.. என்ன.. கொஞ்சம் காசு செலவாகும். அவ்ளோதான்..!

கோர்ட்டு, கேஸு.. வக்கீல் பீஸுன்னு அலையாம.. ஒரே நாள்ல.. ஒரே பேமண்ட்ல் பிரச்சினையை முடிச்சிரலாம் ‘அசால்ட்டு சேது’கிட்ட..!

கெளம்புங்க சாமிகளா..!

Our Score