full screen background image

“விஜய்க்காக கதையெழுதி வைத்துள்ளேன்” – நடிகர் விஷால் அறிவிப்பு

“விஜய்க்காக கதையெழுதி வைத்துள்ளேன்” – நடிகர் விஷால் அறிவிப்பு

“நடிகர் விஜய்க்கு கதையெழுதி வைத்திருக்கிறேன். எதிர்காலத்தில் அவரை வைத்து நான் படம் இயக்குவேன்” என்று உறுதியாய் சொல்கிறார் நடிகர் விஷால்.

இது குறித்து நடிகர் விஷால் பேசும்போது, “கொரோனா காலத்தில் விஜய்க்கு கதை சொல்ல வேண்டும் என்று ராமு சாரை தொடர்பு கொண்டேன். அப்போது முடியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் அவரை வைத்து இயக்குவேன். ஒரு ரசிகனாக இயக்குவேன். அவருக்காக அவருக்கு பிடித்த மாதிரி கதையை எழுதி வருகிறேன். அவர் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவ்வப்போது தோன்றும் போதெல்லாம் சுவரில் எழுதி விடுவேன். வெளியே இருந்தால் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து வைப்பேன்.” என்றார்.

Our Score