இயக்குநர் சாம் ஆண்டனுக்கு 2019 ஒரு சிறப்பான ஆண்டு என்று கூறுவதைவிட, அவரை இரட்டிப்பு மகிழ்ச்சியாக்கிய ஆண்டாகவே சொல்லலாம்.
அவர் இயக்கத்தில் உருவான ‘100’ திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரது அடுத்த திரைப்படமான ‘கூர்கா’ திரைப்படம், வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகவுள்ளது.
இந்தப் படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைக்க, ரூபன் படத்தொகுப்பை கையாள, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
நகைச்சுவை கலந்த டிரைலர் மற்றும் பெரிய பிரபலங்கள் பங்கு பெற்ற பாடல்கள் காரணமாக படத்திற்கு ஆடம்பரமான வரவேற்பு கிடைத்துள்ளது.
டிரெயிலரில் இடம் பெற்றிருக்கும் பல காட்சிகள் ஏற்கெனவே வெளியான திரைப்படங்களை பகடி செய்வது போல இருப்பதால் இத்திரைப்படம் ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படமா என்பதை அறியும் ஆர்வத்தில் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இது குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் பேசும்போது, “நிச்சயம் இது ஒரு ஸ்பூஃப் படம் அல்ல. ஆனால் ஒரு சில ஸ்பூஃப் விஷயங்களும் படத்தில் உள்ளன. படத்தின் முக்கிய மையக் கரு ஒரு உணர்ச்சிபூர்வமான பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ஆரம்பம் ‘100’ படத்தின் படத் தொகுப்புப் பணியின்போது நடந்தது. படத் தொகுப்பாளர் ரூபனும் நானும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோம். அது ஒரு மழை இரவு. ஒரு காதல் கதையை எழுதும் சூழ்நிலை என்பது வழக்கத்திற்கு மாறான கருத்தியலாக மாறியது. இந்த நகைச்சுவை, திரில்லர் பற்றி நாங்கள் விவாதிக்க ஆரம்பித்தோம்.
அடுத்த நாள், நாங்கள் யோகிபாபுவை அணுகி, அவரிடம் கதை சுருக்கத்தை விவரித்தோம். எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கும்விதத்தில் அவர் இந்தப் படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டார். பின்னர் நாங்கள் ஸ்கிரிப்ட்டில் முழு மூச்சில் வேலை செய்யத் தொடங்கினோம்.
உண்மையில், கதை ஒரு சாதாரண கூர்கா மற்றும் ஒரு சோம்பேறி என முத்திரை குத்தப்பட்ட லாப்ரடரை பற்றியது. தீவிரவாதிகள் ஒரு வணிக வளாகத்தைக் கைப்பற்றும்போது அந்த ஒரே இரவில் இவர்கள் இருவரும் எப்படி ஹீரோக்களாக மாறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
கடனா நாட்டு மாடல் எலிசா எர்ஹாட் படப்பிடிப்பு முழுவதும் மிகவும் அன்புடனும், ஆதரவுடனும் இருந்தார். பல நேரங்களில், அவர் கேமரா முன் நடிக்கும் முன்பு, தனது பகுதிகளை மறுசீரமைத்து கொண்டிருந்தார். உண்மையில், இத்தகைய முயற்சிகள் படத்தை சரியான நேரத்தில் முடிக்க எங்களுக்கு உதவியாக இருந்தன.
சகோதரர் சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் உட்பட அனைவரும் இந்த ‘கூர்கா’வை வளர்ப்பதற்கு முற்றிலும் உதவியாக இருந்தனர். பிஸியான நேரத்திலும், சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு (போயா) பாடல் வரிகள் எழுதி கொடுத்தார். மேலும் தனிப்பட்ட முறையில் அழைத்து, ‘பாடல் எவ்வாறு வந்திருக்கிறது?’ என்றும் கேட்டார். இத்தகைய அன்பும் ஆதரவும் எங்கள் முழு மொத்த குழுவுக்கும் சிறந்த தூண்களாக இருந்தன..” என்றார்.