full screen background image

இயக்குநர் சுசி கணேசன் நடத்தும் ‘வருங்கால சூப்பர் ஸ்டார் 2022’ போட்டி..!

இயக்குநர் சுசி கணேசன் நடத்தும் ‘வருங்கால சூப்பர் ஸ்டார் 2022’ போட்டி..!

4 V Entertainment நிறுவனத்தின் சார்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் தயாரிப்பாளர் மஞ்சரி சுசி கணேசனின் தயாரிப்பில், இயக்குநர் சுசி கணேசன் இயக்கும் ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

சுவரில் கரிக் கட்டையால்  கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கான விடை நேற்று நடந்த பிரஸ் மீட்டில் கிடைத்தது.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் மஞ்சரி சுசி கணேசன் பேசும்போது, “நாங்கள் ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம். இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு. எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குநர் சுசி கணேசன் இந்தப் படத்தில் கதாநாயகன் தேர்வு குறித்து புதுமையான முறையில் யோசித்திருக்கிறார்.

இந்தப் படத்துக்காகவே பிரபலமான ஒரு டிவியில் நடக்கப் போகும் பிரம்மாண்டமான talent hunt show-வான வருங்கால சூப்பர் ஹீரோ 2022’ நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளர் இந்தப் படத்தின்  இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்பட இருக்கிறார்.

இந்தப் படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒருவர் பிரபலமான நடிகராகவும், மற்றவர் புதுமுக நடிகராகவும் அமையப் போவதால், இதில் அறிமுக நடிகரின் தோற்றமும் முக பாவனையும் முக்கியம் என்பதால், அவருக்கான ஹீரோ தேடலில் வயது வரம்பு 20-லிருந்து 45-வரை’ என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட முதல் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து, இனிமேல் வரும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது ஹீரோவை இந்நிகழ்ச்சியின் மூலம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் இயக்குர் சுசி கணேசன் உறுதியாய் இருக்கிறார்.

இதே நிகழ்ச்சி கல்கா சூப்பர் ஸ்டார்’ என்ற பெயரில் ஹிந்தியிலும், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் நடத்தப்படும் வேலைகள் துவங்கியிருக்கின்றன.

தற்போதைய இளைஞர்களில் 10 பேரில் 9 பேருக்கு நடிக்கும் ஆர்வம் பெருகிக் கொண்டிருக்கும் இந்த காலத்திற்கு ஏற்ப, சராசரி மனிதனுக்குக்கூட ஒரு ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்த நினைக்கும் இயக்குநர் சுசி கணேசனின் இந்த முயற்சி பெரும் வெற்றியைப் பெறும் என்று நாங்கள் உறுதியாய் நம்புகிறோம்.

எங்களது நிறுவனத்தின் அடுத்த படமான ராணி வேலு நாச்சியார்’ வாழ்க்கை வரலாற்று படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகளும் துவங்கியிருக்கின்றன. எழுத்தாளர் மருது மோகனும், அவரது குழுவும் இந்தப் படத்திற்காக கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மிகப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுப் பதிவாக எங்கள் நிறுவனத்தின் சார்பாக அந்தப் படம் தயாரிக்கப்படும்.

அதற்கடுத்து ‘Bullet-19’  என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படமாக சுசி கணேசன் இயக்கப் போகும் புதிய படத்துக்காக, முக்கியமான நடிகரோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்…” என்றார் மஞ்சரி சசி கணேசன்.

இயக்குநர் சுசி கணேசன் இது பற்றி கூறும்போது, “பலருக்கும் நடிக்கும் ஆசையும், திறமையும் இருந்தும் பல்வேறு காரணங்களால் தங்களது நடிப்பு கனவை ஒத்திவைத்துவிட்டு வேறு பாதையில் பயணப்பட்டு இருப்பார்கள்.

தோற்றமும், முக பாவனையும் முக்கியான இந்த கதாநாயகன் தேடலுக்கு – வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதியுள்ள ஒரு அற்புதமான நடிகரை கண்டெடுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

ஆர்வம் உள்ள போட்டியாளர்கள் www.4vmaxtv.com என்கிற இணையத்தளம் அல்லது 4V MAXTV என்கிற யூ டியூப் தளத்தின் மூலமாக இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் இருக்கும் அளவுக்கான தங்களது வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும்.

இதிலிருந்து இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் தங்க வைக்கப்படுவார்கள். அங்கு, அவர்களுக்கு நடிப்புப் பயிற்சியுடன், உடற் பயிற்சியும் அளிக்கப்படும். 

இதிலிருந்து மூன்றாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களான 12 பேர், 12 வாரங்கள் நடக்கும் இந்த வருங்கால சூப்பர் ஸ்டார் 2022’ போட்டியில் கலந்து கொளவார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் இதனை ஒளிபரப்பும் டிவி சேனலின் பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்தத் தேர்வுகளெல்லாம் அன்றைக்கு புதிதாக இருந்தன. கால மாற்றத்திற்கேற்ப தற்போது இது புதுமையானதொரு நிகழ்வாக இருக்கும். ஒரு படத்திற்காக டேலண்ட் ஹன்ட் ஷோ நடத்தி ஒரு ஹீரோவை தேர்ந்தெடுப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறையாகும்…” என்றார்.

நடிகை ஸ்னேகாவை பிரபலமான வாரப் பத்திரிக்கை மூலமும், நடிகர் ப்ரசன்னாவை பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமும் தேர்ந்தெடுத்த சுசி கணேசன், சோசியல் மீடியாக்களின் தற்போதைய வளர்ச்சிக்கேற்ப வருங்கால சூப்பர் ஹீரோ’-வின் மூலம் கதாநாயகனை தேடும் முயற்சி தமிழ்த் திரையுலகதத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Our Score