full screen background image

“என் சீடர்கள் எப்போதும் நல்ல படத்தைத்தான் கொடுப்பார்கள்” – இயக்குநர் மிஷ்கினின் பெருமிதம்..!

“என் சீடர்கள் எப்போதும் நல்ல படத்தைத்தான் கொடுப்பார்கள்” – இயக்குநர் மிஷ்கினின் பெருமிதம்..!

Rockfort Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளரான முருகானந்தம் தயாரிப்பில் எட்டு தோட்டாக்கள்’ பட இயக்குநரா ்ரீகணேஷின் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம்’.

பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டை ஒட்டி படக் குழுவினர் சமீபத்தில் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “எனது உதவியாளர்கள் எப்பொழுதும் சிறந்த படம்தான் எடுப்பார்கள். எனது உதவியாளனாக இருந்த ்ரீகணேஷ் அறத்துடன் வாழ்பவன். அவனுடைய முதல் படம் மிகச் சிறப்பான ஒன்றாக அமைந்தது. ்ரீகணேஷ் உணர்வுபூர்வமான மனிதன். அவனுடைய அந்த எண்ணங்கள்தான் இந்த திரைக்கதையை அமைக்க உதவியுள்ளது.

படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்தப் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது.  இந்தப் படத்தில் அதர்வா பல பரிணாமங்களை காட்டியுள்ளார். பல தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் அறிமுகமாகிறார்கள். அனைவரும் இந்தப் படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்…” என்றார்.

இயக்குநர் ்ரீகணேஷ் பேசும்போது, “இந்தப் படத்தின் மூலம் எங்களுக்கு மிகப் பெரிய பயணம் கிடைத்தது. தயாரிப்பாளர் என்னுடன் ஆரம்பம் முதல் முடிவுவரை உறுதுணையாக இருந்தார். எனது முதல் படம் முடித்தவுடன் அதர்வா என்னை நம்பி என்னுடன் படம் பண்ண ஒத்துக் கொண்டார். இந்தப் படத்தின் திரைக்கதையில் மிகப் பெரிய  உதவியாய் இருந்தவர் அதர்வா. என் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த குருதி ஆட்டம்’ காப்பாற்றும். இந்தப் படம் பல தொழில் நுட்ப கலைஞர்களுக்கு அறிமுக திரைப்படம். அவர்கள் தங்களுடைய மிகப் பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். இந்தப் படத்தின் நடிகர்கள் பலருக்கு இந்த படத்தின் மூலம் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு ஆக்‌சன் மற்றும் உணர்வுபூர்வமான கதையாக இருக்கும்…” என்றார்.

நடிகர் அதர்வா பேசும்போது, “இந்தப் படம்  தயாரிப்பாளர்  முருகானந்தம் அவர்களால்தான் இவ்வளவு பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பல இளம் நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

்ரீகணேஷ் இந்த கதையை சொல்லும்போது, கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அனைத்து கதாபாத்திரங்களையும் கோர்த்து, ்ரீகணேஷ் நேர்த்தியான திரைப்படமாக மாற்றியுள்ளார்.

இந்த கதையை சிறப்பான ஒன்றாக மாற்றியது இசையமைப்பாளர் யுவன்.  இயக்குநர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார்…” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “இந்தக் குருதி ஆட்டம்’ நாம் வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு படம். கொரோனாவினால் பல படங்கள் சிக்கலில் மாட்டியது. அதை தவிர்த்துவிட்டுத்தான் இந்தப் படத்தின் வெளியீட்டை பார்க்க வேண்டும்.

அதர்வா ஒரு எனர்ஜிட்டிக் ஆன நடிகர். அவர் இந்தப் படத்தில் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ‘குருதி ஆட்டம்’ மிகப் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். Rockfort Entertainment நிறுவனத்திற்கு இந்தப் படம் பெரிய வெற்றியாக அமைய வேண்டும். இயக்குநர் ஶ்ரீகணேஷ் திறமையானவர். இந்த படம் பார்க்க பிரஷ்ஷாக இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகள்…” என்றார்.

நிர்வாக தயாரிப்பாளர் ்ரீராம் பேசும்போது, “இந்தப் படம் ஒரு புதுமையான ஆக்சன் படம். கடின உழைப்புக்கு பிறகு திரைக்கு வருகிறது. நடிகர் அதர்வா இந்தப் படத்திற்கு மிகப் பெரும் துணையாக இருந்தார். அவரால்தான் இந்தப் படம் முழுதாக முடிவடைந்தது. இந்தப் படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்…” என்றார்.

இப்படம் உலகமெங்கும் வரும் ஆகஸ்ட் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Our Score