நடிகர் கார்த்தி சூப்பர் ஹிட்டான ‘சிறுத்தை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார், அதன் பிறகு மீண்டும் இப்பொழுது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் மீண்டும் போலீஸ் அதிகாரி அவதாரத்தை எடுக்கிறார்.
இதில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ‘சதுரங்கவேட்டை’ இயக்குநர் H.வினோத் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ்பாபு, S.R. பிரபு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சத்யான் சூரியன், சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன், படத் தொகுப்பு T.சிவா நந்தீஸ்வரன், கலை – K.கதிர், நிர்வாக தயாரிப்பு – அரவிந்த்ராஜ் பாஸ்கரன், தயாரிப்பு நிர்வாகம் – S.M. சிராஜீதீன், R.ராஜாராமன், எழுத்து, இயக்கம் – ஹெச்.வினோத்.
இதன் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரம் சென்னையில் ஆரம்பமாகிறது.