ஜூனா பிக்சர்ஸ் பிரைவட் லிமிடெட் சார்பில் N.ஷண்முகசுந்தரம், K.முகமது யாசின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘டெய்சி’.
புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் தீபக் பரமேஷ் , ஜாக்லீன் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.
C.H.மோகன்ஜி கலையமைப்பில், ஹரிஹரனின் படத் தொகுப்பில், அறிமுக ஒளிப்பதிவாளர் மணிஷ் மூர்த்தி ஒளிப்பதிவில், புதுமுகம் சிவசரவணன் இசையில், எம்.ஆர்.கே.வுடன் இணைந்து கதை எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் ஸ்ரீநாத் ராமலிங்கம்.
படத்தைப் பற்றி இயக்குனர் ஸ்ரீநாத் கூறுகையில், “டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில் பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்தியாசமானது. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில்தான் பிறக்கின்றனர் என்ற கூற்றை உறுதிப்படுத்தும் கதை இது.
டெய்சி. அன்புக்காக ஏங்கி அலைபாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியை பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்ளுக்கு தேவையான கருத்தைக் கொண்ட கதை என்பதால் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்..” என்றார்.