full screen background image

விருது கிடைத்தது ஒருவருக்கு.. ஆனால் திரையில் பாடியிருப்பதோ வேறொருவர்..!

விருது கிடைத்தது ஒருவருக்கு.. ஆனால் திரையில் பாடியிருப்பதோ வேறொருவர்..!

இந்தக் குழப்படி நடந்திருப்பது கேரளாவில்..! சமீபத்தில்தான் கேரள அரசின் 2013-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுப் பட்டியலில் சிறந்த ஆண் பாடகருக்கான விருது கார்த்திக் என்பவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில்தான் குழப்பமே.

‘ஒரிஸ்ஸா’ என்ற மலையாளப் படத்தில் ‘ஜன்மத்தரங்களில்’ என்ற பாடலை பாடியதற்காகத்தான் கார்த்திக்கிற்கு இந்த விருது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த ‘ஒரிஸ்ஸா’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல் காட்சியில் பிரதீப் சந்திரகுமார் என்பவர்தான் பாடியிருக்கிறாராம். ஆனால் கார்த்திக் பாடிய வெர்ஷன்தான் படத்தின் ஒலிநாடாக்களில் பதிவாகியிருக்கிறதாம். ஒலிநாடாக்களிலும் கார்த்திக்கின் பெயர்தான் இருக்கிறதாம். படத்தின் டைட்டிலிலும் கார்த்திக்கின் பெயர்தான் இருந்திருக்கிறது.

விருதுக்காக அனுப்பப்பட்ட பட்டியலில் டைட்டிலில் இருந்த கார்த்திக்கின் பெயரை அப்படியே எடுத்துக் கொண்டுவிட்டார்கள். இப்போது பயன்படுத்தாத ஒரு பாடலுக்கு விருதா என்று கேரளா திரையுலகில் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.

வழக்கம்போல தலையில் அடித்துக் கொண்ட  அரசுத் தரப்பினர்.. “பிரதீப்தான் அந்தப் பாடலை பாடியிருக்கிறார் என்று ஒரு உறுதிமொழியினை தயாரிப்பாளரும், இயக்குநரும் இணைந்து எங்களிடம் சமர்ப்பித்தால் நாங்கள் அதனை ஜூரி கமிட்டி முன்பாக வைக்கிறோம். இனி அவர்களது முடிவுதான் எல்லாமே..” என்று சொல்லிவிட்டார்கள்..

டிராக் பாடுவது ஒரு விஷயம்.. ஒரிஜினலாக பாடுவது வேறு விஷயம்.. இப்போது திரைக்கு இருவர் என பாட வைத்து அதில் பெஸ்ட்டை தேர்வு செய்து ஸ்கிரீன் செய்வார்கள் போலிருக்கிறது..!

Our Score