மிக சிறந்த கதை என அனைவராலும் பாராட்டப்படும் ‘அஞ்சல’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
பழம்பெரும் சண்டை பயிற்சியாளரான சூப்பர் சுப்பராயனின் மகனும் தற்போதைய முன்னணி சண்டை பயிற்சியாளரான திலீப் சுப்பராயன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் விமல், நந்திதா இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பசுபதி நடித்துள்ளார். புதிய இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கியிருக்கிறார்.
ரசிகர்களைக் கவரும் வகையில் பல அம்சங்கள் படத்தில் இருந்தாலும் மலையாள திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளரான கோபி சுந்தர் இந்த ‘அஞ்சல’ படத்தின் இசை அமைப்பாளர் என்பது படத்திற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பலம். ‘Bangalore days’, ‘என்னு நிண்டேமொய்தீன்’ ஆகிய மலையாள படங்களின் இசை மூலம் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட இசை இவருடையது.
டீ கடைகள் தமிழர்களின் வாழ்வில் இன்றியமையாததாக இருக்கிறது, நமது சமுதாய, பொருளாதாரம், அரசியல் எல்லாவற்றிலும் டீ கடைகள்தான் பிரதானமாக அங்கம் வகிக்கின்றன. அப்பேர்ப்பட்ட ஒரு டீ கடைக்கும், ஒரு ஊருக்கும் உள்ள உறவை ஜனரஞ்சகமாக, மிகவும் யதார்த்தத்துடன் சொல்லப்பட்டிருக்கும் படம்தான் இந்த ’அஞ்சல’ திரைப்படம்.
அரசாங்கம் ஒரு ஊரில் சாலையை விஸ்தரிக்க முயலும்போது, அதனால் பாதிக்கப்படும் தனது பரம்பரை சொத்தான டீக்கடையைக் காப்பாற்ற முயலும் ஒரு கவிதைதான் இந்த ‘அஞ்சல’ திரைப்படம்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற விவாதம் தற்போது தமிழ்நாடெங்கும் பரவலாக பேசப்பட்டுவரும்போது, சரியான நேரத்தில் சரியான படமாக வருகிறது ‘அஞ்சல.’
தமிழ்த் திரையுலகில் வளர்ந்துவரும் விநியோக நிறுவனமான ‘ஆரா பிக்சர்ஸ்’ நிறுவனத்தினர், இந்த ‘அஞ்சல’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ‘first copy pictures’ என்னும் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடுகின்றனர்.
“இந்த வித்தியாசமான கதையே இந்த படத்தின் மேல் எங்களது ஆர்வத்தை தூண்டிவிட்டது. எங்களது நிறுவனமான ‘ஆரா சினிமா’ நிறுவனம் மூலமாக நாங்கள் பல்வேறு தரப்பட்ட படங்களையும் மக்களுக்கு வழங்க நினைத்திருக்கிறோம். தரமான படங்கள் எங்கள் நிறுவனத்தின் முகவரியாக இருக்கும். இந்த ‘அஞ்சல’ படமும் அந்த தரமான வரிசையில் ஒன்றாக இருக்கும் என்பதில் என்பதில் இரண்டாவது கருத்தே இல்லை…” என்று உறுதியோடு கூறுகிறார் ‘ஆரா பிக்சர்ஸ்’ நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ்.
ரசிகர்களின் ரசனைக்கேற்ப ருசியான படமாக இருக்கும் ‘அஞ்சல ‘.