ஸ்ரீஅம்மன் மீடியாஸ் நிறுவனம் தயாரித்து, திரைக்கு வர தயார் நிலையில் உள்ள புதிய திரைப்படம் ‘அமைச்சர்’.
இப்படத்தின் கதாநாயனாக ஜெய் ஆகாஷ் மற்றும் கதாநாயகியாக தேவிகா நடித்துள்ளனர். மேலும் சர்வதேச விளையாட்டு வீரர் சௌந்தரராஜன், காவல் துறையில் உயர் பதவியில் இருந்த S.D.ராஜன், A.P.சேகர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான அருணாச்சலம், புஷ்பவதி, முன்னணி நடிகரான விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, இயக்கம் – L.முத்துகுமாரசாமி, திரைக்கதை, வசனம் – T.ஜெயலஷ்மி, இசை – ‘தேனிசை தென்றல்’ தேவா, ஒளிப்பதிவு – வே.இ,ராஜா, பாடல்கள் – சினேகன், மதன் கார்க்கி, படத் தொகுப்பு – ஆண்டனி, ரியாஸ், நடன இயக்கம் – ஸ்ரீதர், தினா, மக்கள் தொடர்பு – செல்வரகு.
இத்திரைப்படத்தை ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி விஷ்வல் கம்யூனிகேஷன் மாணவர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இந்தப் படத்தில் கேமரா வசனம், தொழில் நுட்ப உதவிகள் என்று அனைத்திலும் விஷ்வல் கம்யூனிகேஷன் மாணவர்கள், தொழிற் நுட்ப கலைஞர்களூடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

கரை வேஷ்டி கட்டிய ஒரு அமைச்சரின் கறைபடாத, கண்ணியமான காதல் கதைதான் இந்த அமைச்சர் திரைப்படம்.
மூத்தோர் திட்டம், சமத்துவத் திட்டங்கள் போன்ற நற்பணிகள் செய்யும் கதாபாத்திரமாக அமைச்சரின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம், திருத்தணி, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப்படத்தின் பாடல்களை பதிவேற்றம் செய்யப்பட்ட யூ-டியூபில் 23 லட்சம் பேர் கண்டு களித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 29-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது.