full screen background image

“பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – ஐஸ்வர்யா ராஜேஷின் வருத்தம்!

“பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – ஐஸ்வர்யா ராஜேஷின் வருத்தம்!

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தை தற்போது அதே பெயரிலேயே பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார்.

இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் துர்கா ராவ், சவுத்ரி நீல் சவுத்ரி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள்,  இயக்குநருடன் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக் குழுவினருடன் தலைமை விருந்தினராக திருமதி சுகாசினி மணிரத்தினம் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “இந்த நிகழ்ச்சிக்கு வந்த சுஹாசினி மேடத்திற்கு நன்றி. இயக்குநர் கண்ணன் ஸார் இந்தப் படத்தை மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்கும்போது, முதலில் தயங்கினேன். படம் பாருங்கள் என்று கூறியதும் பார்த்தேன்.

மறு உருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோல், எனக்கும் ஒப்பீடும், குழப்பமும் இருந்தது. 2, 3 நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார். வேலை பார்ப்பார். திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நான் இதை கவனித்ததே இல்லை. அன்றுதான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

மேலும், கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த வாய்ப்பை கொடுத்த கண்ணன் சாருக்கு நன்றி.

நிமிஷாவின் நடிப்பை 50 சதவிகிதம் நடித்திருந்தாலே நான் சந்தோஷப்படுவேன். என்னை அழகாக காட்டியிருந்ததற்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ராகுல் ஒரு இயக்குநர். இந்த படத்தில் நடிக்கும்போது நான் இது போன்ற ஆள் இல்லை என்று கூறினார். இது போன்ற சிறந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்..” என்றார்.

Our Score