full screen background image

சரத்குமார்-கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..!

சரத்குமார்-கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..!

பார்சா பிக்சர்ஸ் P.R.மீனாக்‌ஷி சுந்தரம் & பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் I.B.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘கிரிமினல்’.

இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக்கும், சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார், இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – பிரசன்னா S.குமார், படத் தொகுப்பு – மணிகண்ட பாலாஜி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்கள்கிழமையன்று மதுரையில் துவங்கியது. மொத்தப் படத்தையும் 40 நாட்களில் ஒரே ஷெட்யூலில் முடிக்க படக் குழு திட்டமிட்டுள்ளது.

படம் குறித்து பார்சா பிக்சர்ஸின் தயாரிப்பாளர் P.R.மீனாக்‌ஷி சுந்தரம் பேசும்போது, “எங்களுடைய புதிய புராஜெக்ட்டான இந்தக் ‘கிரிமினல்’ படம் வெற்றிகரமாக மதுரையில் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. மொத்தப் படத்தையும் ஒரே ஷெட்யூலாக 40 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்.

இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களில் கெளதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிக்க இருக்கிறார்கள். கெளதம் கார்த்திக் அக்யூஸ்ட்டாக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார். பல படங்களில் அவர் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாகவும் புதிதாகவும் பார்வையளர்களுத் தெரிவார்..” என்றார்.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் I.B.கார்த்திகேயன் பேசும்போது, “இந்தக் ‘கிரிமினல்’ படத்தின் கதையும், தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் அதைத் திரைக்கதையாக மாற்றியிருக்கக் கூடிய விதமும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் விதமாக அமையும்.

அவர் கதையை சொன்னபோது, கதையின் பல தருணங்கள் ஒரு அனுபவமிக்க தேர்ந்த இயக்குநர் சொல்வது போல இருந்தது. கெளதம் கார்த்திக் & சரத்குமாரின் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது..” என்றார்.

Our Score