full screen background image

“நண்பர் சிம்புவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்..” – நடிகை ஹன்சிகா பேச்சு

“நண்பர் சிம்புவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்..” – நடிகை ஹன்சிகா பேச்சு

போனில் அழைத்து சொன்னவுடனேயே சிம்பு இந்த ‘மஹா’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதனால் நான் அவருக்கு பெரிதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்’ என்று நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள திரைப்படம் ‘மஹா’. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களை கார்கி, விவேகா, சௌந்தரராஜான் எழுத ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் 22-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் வி.ஆர். மால் தியேட்டரில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா, நடிகர் ஆரி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, ல‌ஷ்மன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா பேசும்போது, ”இந்த மஹா’ படம் எனக்கு வந்தபோது, இது எனது 50-வது படமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி தானாகவே அமைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

இந்தப் படத்தில் நடிக்க என்னுடைய அம்மாவும் ஒரு முக்கிய காரணம். அவர்தான், ‘இந்த மஹா’ படம்தான் உனக்கு 50-வது படமாக இருக்க வேண்டும். இதில் நீ அவசியம் நடிக்க வேண்டும்..” ன்று அறிவுறுத்தினார்.

இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்பதற்காக எனது நண்பர் சிம்புவிற்கு ஒரே ஒரு போன் கால்தான் செய்தேன். உடனே சம்மதம் தெரிவித்து நடித்துக் கொடுத்தார் சிம்பு. அவர் இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். படத்தின் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்து படத்தை மெருகேற்றியுள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது..” என்றார்.

Our Score