full screen background image

“யட்சன்’ படத்திற்கு பின்பு ஒரு ரவுண்டு வருவேன்..” – நடிகை தீபா சன்னதியின் தன்னம்பிக்கை..!

“யட்சன்’ படத்திற்கு பின்பு ஒரு ரவுண்டு வருவேன்..” – நடிகை தீபா சன்னதியின் தன்னம்பிக்கை..!

கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தை சொந்த ஊராகக்  கொண்ட மாடல் அழகியான தீபா சன்னதி ‘எனக்குள் ஒருவன்’ மற்றும் ‘யட்சன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அழகி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். நகைகளை வடிவமைக்கும் கல்வியை படித்து உள்ள இவர் கவிதைகளை எழுதுவதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.

“கல்லூரியில் படிக்கும்போது  கலந்து கொண்ட  நாடக அனுபவமும், விளம்பர நிகழ்சிகளில் கலந்து கொண்ட அனுபவமும் இப்போது தன்னுடைய நடிப்பு பணிக்கு பெரிதும் உதவுகின்றன..” என்கிறார் தீபா.

“தமிழ்த் திரையுலகில் எனக்கென்று தனி இடம் பிடிப்பதே எனது லட்சியம். இங்கு கிடைக்கும் அருமையான கதைகள், இருக்கின்ற திறமையான இயக்குனர்கள், திரையுலகினருக்கு பொதுமக்கள் மத்தியில் கிடைக்கும் மதிப்பு, மரியாதை ஆகியவை உலகில் வேறு எங்கும் கிடைக்குமா என்று தெரியாது.

என் முதல் படமான ‘எனக்குள் ஒருவன்’  படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளி வர தயாராக  உள்ளது. இது கன்னடத்தில் ஏற்கனவே நான் நடித்து வெளிவந்த ‘லூசியா’ திரைப்படத்தின் மொழி மாற்று படமாகும். இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு இணையாக நடித்திருக்கிறேன்.

எனது அடுத்த படமான ‘யட்சன்’ படத்தில் எனக்கு பிரமாதமான கதாபாத்திரம். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். அவர் இருக்கும்போது படப்பிடிப்பு உற்சாகமாக இருக்கும். அவர் ஒரு நல்ல மனித நேயமிக்க மனிதராவார். என்னுடைய சக நட்சத்திரங்களான சுவாதி மற்றும் கிருஷ்ணா ஆகியோரை மறக்கவே முடியாது. விஷ்ணுவர்தனை போல் ஒரு பெரிய இயக்குனரின் இயக்கத்தில் நடிப்பது பெரும் பாக்கியம் ‘யட்சன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படம் மூலம் நானும் தமிழில் பெரிய வலம் வருவேன்’ ‘ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் தீபா சன்னதி.  

Our Score