full screen background image

நடிகர் சங்கத் தேர்தல் – 150 பேரின் வாக்களிக்கும் தகுதி ரத்தானது..!

நடிகர் சங்கத் தேர்தல் – 150 பேரின் வாக்களிக்கும் தகுதி ரத்தானது..!

நடிகர் சங்கத்தில் ஓட்டுப் போட தகுதியுள்ள மொத்த வாக்காளர்கள் 3,139 பேர். இதில் நடிகர் நடிகைகள், மற்றும் நாடக-நடிகர் நடிகைகள் அடங்குவர்.

வெளியூர்களில் இருந்து 1,175 வாக்காளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தபாலில் ஓட்டுக்களை அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் 241 பேர் நேரில் வாக்களிப்பதாக தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பினார்கள். 

இவர்களை தவிர்த்து மீதியுள்ள 934 பேருக்கு தபாலில் வாக்களிக்க கடந்த 9-ம் தேதி வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. 12-ம் தேதி முதல் தபால் ஓட்டுகள் சென்னையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தன.

புதுக்கோட்டையில் 39, மதுரையில் 22 என இதுவரையிலும் 61 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

முதலில் நேரில் வருவதாகவும், பின்னர் தபாலில் ஓட்டுப் போடுவதாகவும் மாறி மாறி கடிதம் அனுப்பிய 150 பேரின் ஓட்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

தபால் ஓட்டுகள் வந்து சேர்வதற்கு நாளை மறுநாள்(17-ம் தேதி) கடைசி நாள் என்பதால் இன்றுடன் தபால் வாக்குப் பதிவு முடிவடைந்து வாக்குச் சீட்டுகள் அனைத்தும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.

தொடர்ந்து வரும் 18-ம் தேதி  சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

Our Score