நடிகர் வடிவேலுவை தான் இயக்கப் போகும் படத்தில் நாயகனாக நடிக்க வைக்கப் போவதாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் அறிவித்திருக்கிறார்.
வைகைப் புயல் வடிவேலு தற்போது இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கவுள்ளதாக வடிவேலுவே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். இந்த வரிசையில் இயக்குநர் கெளதம் மேனனின் படமும் காத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள இயக்குநர் கெளதம் மேனன், “இந்தப் படம் ஒரு காமெடி கலந்த காதல் படமாக இருக்கும். நான் யோசித்து வைத்திருக்கும் அந்த கதாபாத்திரத்தை வடிவேலுவால்தான் சிறப்பாக நடிக்க முடியும். இது குறித்து தொடர்ந்து அவருடன் பேசி வருகிறேன். பேச்சு வார்த்தை தொடர்கிறது..” என்று சொல்லியிருக்கிறார்.