டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.N.S. செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அபூர்வ மகான்.’
இந்த படத்தில் தலைவாசல் விஜய் சாய்பாபா வேடமேற்று நடிக்கிறார். மற்றும் இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள்.
மற்றும் சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், பிரேம்குமார், அஜெய்ரத்னம், பாண்டு, சிசர் மனோகர், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், அவன் இவன் ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் கணேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வினுசக்கரவர்த்தியும் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – G.சீனிவாசன் , எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், இசை – V.தஷி, ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், கலை – S.S.சுசி தேவராஜ், நடனம் – பவர் சிவா, மாமு சரவணன், பாடல்கள் – அண்ணாமலை, தமிழமுதன், சினேகன். ஏம்பல் ராஜா, வேலாயுதம், தயாரிப்பு மேற்பார்வை – ராம்பிரபு, இணை தயாரிப்பு – K.P.செல்வம், தயாரிப்பு – T.N.S.செல்லத்துரை தேவர், கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – கே.ஆர்.மணிமுத்து.
படம் பற்றி இயக்குநர் கே.ஆர்.மணிமுத்து பேசும்போது, “இந்தப் படத்திற்காக ஆறடி உயரமுள்ள பாபாவின் சிலை வடிவமைக்கப்பட்டு படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது நிறைய தடங்கல்கள் ஏற்பட்டது. அந்த தடங்கல்கள் அனைத்தும் பாபா அருளால் நீங்கியது. படப்பிடிப்பிற்கு உருவாக்கப்பட்ட அந்த ஆறடி உயர பாபா சிலையை ஆவுடையார்கோவில் என்ற ஊரில் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பாபா அருள் விரைவில் கிடைக்க உள்ளது…” என்றார் இயக்குநர் கே.ஆர்.மணிமுத்து