full screen background image

தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘டிங் டாங்’ திரைப்படம்

தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘டிங் டாங்’ திரைப்படம்

ஜாய் ஸ்டார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தினரின் வெளி வரவிருக்கும் ‘ஆகம்’, முடிவடையும் தருவாயில் உள்ள ‘கரம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தங்களது மூன்றாவது படத் தயாரிப்பான ‘டிங் டாங்’ என்ற தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராக உள்ள புதிய படத்தின் பூஜையை சென்னையில் நடத்தினர்.

“டிங் டாங்’ முற்றிலும் புதுமையான, உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு த்ரில்லர் கதை.

ஜினிஷ் என்ற புதிய இயக்நரை இந்தப் படத்தில் அறிமுகம் செய்கிறோம். தெளிவான கதை, நீரோட்டம் போன்ற திரைக்கதை என்று எதிர்காலத்தில் ஒரு பெரிய இயக்குநராக வருவார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார் ஜினிஷ்.

‘விடியும் முன்’, ‘ஆகம்’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சரண் இந்த ‘டிங் டாங்’ படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். சில படங்களுக்கு ஒளிப்பதிவே பிரதானமாக கதை சொல்லும், அந்த வகையில் சரணின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப் பெரிய பலம்.

Ding-Dong-team

இந்தப் படத்தின் நாயகன், நாயகி மற்றும் கதாபாத்திரங்களின் தேர்வு, இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. வருகின்ற ஏப்ரல் மாதம் கதைக்குத் தேவைப்படும் மலை பிரதேச ஸ்தலங்களிலும், சென்னையிலும் படப்பிடிப்பு துவங்கித் தொடர்ந்து நடக்கவுள்ளது…” என இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கோடீஸ்வர ராஜு, மற்றும் ஹேமா ராஜு ஆகியோர் கூறியுள்ளனர்.

Our Score