சத்தமே இல்லாமல் தனது அடுத்தப் படத்தின் தயாரிப்பைத் துவக்கிவிட்டார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.
‘எனக்குள் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இருக்கும் அதே நேரத்தில் அடுத்தடுத்த படங்களின் தயாரிப்புகளையும் தொடர்ந்து வருகிறார் சி.வி.குமார்.
தற்போது அபினேஷ் இளங்கோவனின் ‘அபி அண்ட் அபி பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ள சி.வி.குமார் இனிமேல் தனது தயாரிப்புகள் கூட்டணியாகத்தான் தயாரிக்கப்படும் எ்ன்றும் சொல்லியிருக்கிறார்.
இந்தக் கூ்டடணியில் உருவாகும் படம்தான் ‘144’. ஒரு ஊரில் ஏற்படும் அல்லது ஏற்படவிருக்கும் கலவரத்தை தடுக்கும்விதமாக அந்த ஊரின் காவல்துறை போடும் தடையுத்தரவிற்கு அரசியல் சட்டப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண் இந்த ‘144’-தான்.
இந்தப் படத்தில் ‘மிர்ச்சி’ சிவா, அசோக் செல்வன், ஓவியா, சுருதி ராமகிருஷ்ணன், முனீஸ்காந்த் மற்றும் பலர் நடிக்கிறார்கள். குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான்பால் எடிட்டிங் செய்யவிருக்கிறார். சீன் ரோல்டன் இசையமைக்க காத்திருக்கிறார். மணிகண்டன் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை மதுரையில் பூஜையுடன் துவங்கியிருக்கிறது.
Our Score