‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்கள் இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன், மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றன.
தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தற்போது தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ‘ரைட்டர்’ என்னும் படத்தினை தயாரிக்கிறார்.
கோல்டன் ரேசியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார், மற்றும் ஜெற்றி புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ஹரிகிருஷ்ணன், இனியா, இயக்குநர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிரதீப் காளிராஜா, கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். யுகபாரதி, முத்துவேல் இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

சமுத்திரக்கனி இந்த படத்தில் காவல் துறையில் பணிபுரியும் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிகார மையத்தில் பணிபுரியும் ஒரு எளிய மனிதனாக இயல்பான வாழ்வை வாழ்பவராக நடித்திருக்கிறார்.

“வழக்கமான சமுத்திரக்கனியை இந்தப் படத்தில் பார்க்க முடியாது. இது அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும்…” என்கிறார் இயக்குநர் பிராங்ளின்.