full screen background image

விமல் – வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் இயக்குநர் சுராஜ்..!

விமல் – வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் இயக்குநர் சுராஜ்..!

கடந்த ஜனவரியில் வெளியான ‘மன்னர் வகையறா’ படத்தின் வெற்றிக்கு பிறகு பல முன்னணி இயக்குநர்களும், புதிய இயக்குநர்களும் நாயகன் விமலை அணுகி கதை சொல்லி வருகின்றனர்.

நிதானமாக கதை கேட்கும் பழக்கமுடைய விமல், தனக்கு பொருத்தமான கதைகளையும், அவற்றை இயக்கும் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இயக்குநர்களுடன் அடுத்தடுத்து கை கோர்க்க தயாராகி வருகிறார். 

அந்த வகையில் இந்த வருடத்தில் விமல் நடிப்பில் அரை டஜன் படங்களுக்கு மேல் களம் காண இருக்கின்றன.

இயக்குநர் எழில் டைரக்சனில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் விமல்.  சுராஜ் டைரக்சனில் போலீஸ் அதிகாரிகளாக விமல் – வடிவேலு நடிக்கும் படம் ஒன்று ‘மருதமலை’ பாணியில் கலக்கலாக உருவாகவுள்ளது. 

இது தவிர  ‘வெற்றிவேல்’ இயக்குநர் வசந்தமணி, ‘தமிழன்’ பட இயக்குநர் மஜித், ஆகியோரின் படங்களிலும் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் விமல். 

‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து  மீண்டும் பூபதி பாண்டியன் இயக்கத்தில்  நடிக்க இருக்கிறார் விமல். ஆக, இந்த வருடம் விமலின் கால்ஷீட் டைரி இப்போதே நிரம்பிவிட்டது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இன்னொரு பக்கம் ஏற்கனவே விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் ‘கன்னி ராசி’ படம் இறுதிக்கட்ட பணிகளில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் சற்குணம் இயக்கத்தில் ’களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பிலும் நடித்து வந்தார் விமல்.

கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது ’களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பு, வரும் மே 3-ம் தேதி முதல் மீண்டும் துவங்குகிறது. 

இந்த வேலை நிறுத்தம் நடந்த இந்த 5௦ நாட்கள்தான் விமலுக்கு கிடைத்த ஒய்வு நாட்கள்.. இனி வரும் நாட்களில் ஓய்வில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகிவிட்டார் விமல் என்கிறது அவரது அலுவலக வட்டாரம்.

Our Score